தமிழ் மொழி அறிவோம்
திருக்குறள்
சில வினாக்கள்
குறளில் வரும்
பழங்கள்
பூக்கள் எவை?
வக்ரபோலி
என்றால் என்ன?
இதற்கும் குறளுக்கும் என்ன தொடர்பு?
விடை
திருக்குறளில் வரும் ஓரே பழம்
நெருஞ்சில் பழம்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1120)
பொழிப்பு: அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.(குறள் 1114,)
பொருள்
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.
வக்ரபோலி
நரிக்குறவர்கள் பேசும் மொழி
இந்த மொழியிலும் திருக்குறள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்த மொழிக்கு எழுத்து வடிவம் உண்டு
முழுமையாக விடையளித்த
திருவாளர்கள்
A R விசுவநாதன்
DRP சுந்தரம்
பகுதி விடையளித்த திருவாளர்கள்
பாடி பீர்
பீர் ராஜா
மெகராஜ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21102020wed
sherfuddinp@gmail.com
sherfuddinp.blogspot.com

No comments:
Post a Comment