Sunday, 10 October 2021

English Quiz Staves



 


Which word connects these three?

Answer
Staves
Meaning (a few of many meanings)

1.1Any of the lengths of wood fixed side by side to make a barrel, bucket, or other container.

1.2A strong wooden stick or iron pole used as a weapon.

3.A set of five parallel lines on any one or between any adjacent two of which a note is written to indicate its pitch

Out of many answers received
Crochet seems almost near to the correct one

The symbol shown in the first picture is called crochet. It is one of the signatures of musical symbol.Further, Crochet 09:13 Small hook which is made up of wood or bamboo used for interlocking yarn , thread etc., In the second and third picture Bamboo and woods are shown. So, crochet connects all these three .

Greetings and Congratulations to
Mr Kanakaraj for
Crochet

Music .music instruments .sound and .xylaphone are other answers which seem reasonable

Greetings and Congratulations to
M/S  Ayubkhan. Sharmada .Karam
Jayaram Prakash and Papti for these answers

Thanks to M)S Rajathi and Thasleem for their sincere attempt
Especially Rajathi was the first to respond

11102021mon
Sherfuddin P

Friday, 8 October 2021

நல வாழ்வு தோப்புக்கரணம்



 நல வாழ்வு


சூப்பர் ப்ரெயன் யோகா

Super Brain Yoga

என்ற பெயரில் மேலை நாடுகளில் பரவலாக மிக அதிகமான கட்டணத்தில் சொல்லித் தரப்படும் பயிற்சி எது தெரியுமா?


நம் நாட்டில் பன்னெடுங்காலமாக ஒரு வழிபாட்டு முறையாகவும் தவறுக்கு தண்டனையாகவும் இருந்து இப்போது மறந்து . மறைந்து போன 

தோப்புக்கரணம் எனும் உக்கிதான்


இதன் செய்முறை பெரும்பாலும் பலருக்கும் தெரிந்திருக்கும்

எனவே சுருக்கமாக சொல்கிறேன்


கால்களை சற்று அகலமாக விரித்து நேராக நிற்க வேண்டும்

வலது காது மடலை இடது கை விரல்களாலும்

இடது காது மடலைவலது கை விரல்களாலும் பிடித்துக்கொண்டு 

நன்றாக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்


குறிப்பாக கவனிக்க வேண்டியது


வலதுகை இடதுகைக்கு மேலே இருக்க வேண்டும்


கட்டை விரல் காதுமடலின் வெளிப்பறமும் ஆள்காட்டி விரல் உள்புறமும் இருக்க வேண்டும்


உட்காரும்போது கால்பாதம் தரையில் நன்றாகப் பதிந்திருக்கவேண்டும்


நிதானமாக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்

மூச்சை அடக்கக் கூடாது


மூட்டு வலி முதுகு வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது


சொல்லப்படும் பலன்கள்

நினைவுத்திறன் சிந்தனனைத்திறன் பெருகும்


காது மடலில் நிறைந்திருக்கும்

அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன 

இதனால் உடல் முழுதும் சீர்செய்யப் படுகிறது


காலில் குருதி ஓட்டம் சீராகி இதயம் வலுப்பெறுகிறது


முதுகுத் தண்டு தூண்டப்பட்டு இளமை காக்கப் படுகிறது


முதலில் ஒரு நாளைக்கு பத்துமுறை அல்லது முடிந்த வரை செய்யத் துவங்கி படிப்படியாகக் கூட்டலாம்


மறந்து போன இந்தப் பயிற்சி இப்போது புத்துயிர் பெற்று யோகாகன்த்தின் ஒரு அங்கமாக பல இடங்களில் பயிற்றுவிக்கப்படுதிறது


உடலுக்கும் உள்ளத்துக்கும் உரமூட்டும் உக்கியை பயின்று நலமுடன் வளமுடன் வாழ்வோம்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


09102021சனி

சர்புதீன் பீ

Thursday, 7 October 2021

குரான் 41:16 54:19 தீய்நாட்கள்

 தீயநாள் தீயநாட்கள் 

இந்தச் சொற்கள் வரும் மறை வசனங்கள் எவை?


விடை


1. 41 புஸ்ஸிலத் வசனம் 16


ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, தீய நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம் மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும்

இழிவுள்ளதாகும் அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.41 16


2. 54 அல்கமர் வசனம் 19


நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான தீய ஒரு நாளில், பேரிரைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.5419


தீமை என்ற பொருள் கொண்ட

நஹிஸாத்தில் 

நஹ்ஸின் என்ற அரபுச் சொற்கள் வருகின்றன


சுருக்கமான விளக்கம்


இறைவன் படைப்பில் தீய நாள்

தீய நேரம் என்பது எதுவும் இல்லை 


பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் திருந்தாமல் தொடர்ந்து தீய வழியில் சென்ற ஒரு சமுதாயத்தை தண்டிக்க கொடிய புயலை இறைவன் அனுப்பி வைக்கிறான்

இந்த அழிவுகள் அந்த கேடுகெட்ட சமுதாயத்துக்குதான் தீய நாள்

மற்றவர்களுக்கு அல்ல


இரண்டும் நடந்த புதன்கிழமை ஒரு தீய நாளாக குறிப்பாக இஸ்லாமிய மாதத்தின் கடைசி புதன்கிழமை மிகவும் தீய நாளாகக் கருதப்படும் மனப்பாங்கு -ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே பரவியது 

அதன் தாக்கத்தில் ஸஃபர் மாதம் முழுதும் ஒரு தீய மாதமாகக் கருதப்பட்டு அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை ஒடுக்கத்து புதன் என்றானது


"தீய நாட்கள் " என்று பன்மையிவ் குறிப்பிடும்போது இந்தக்கருத்து அடிபட்டு விடுகிறது


மேலும்,சுரா 69 அல்ஹக்கா வசனம் 7 ஏழிலில்  தொடர்ந்து ஏழு இரவுகள் எட்டு நாட்கள் புயல் சீறியதாக வருகிறது


எனவே இறைவன் படைப்பில் கெட்ட நாள் நேரம் இவற்றிற்கெல்லாம் ஏக இறை நம்பிக்கை கொண்டவரிடம் இடம் இல்லை என்பது உறுதி


(Source Towards understanding Quran)


சரியான விடை அளித்த

சகோ ஹஸன் அலி (வழக்கம் போல் முதல் சரியான விடை)

நௌக்ஷின் கதீஜாவுக்கு

வாழ்த்துகள் பாராட்டுகள்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


08102021வெள்

சர்புதீன் பீ

Tuesday, 5 October 2021

தமிழ் – தனித் தமிழ் சில சிந்தனைகள் , கருத்துக்கள்

 


தமிழ் – சில சிந்தனைகள் , கருத்துக்கள்

 

பல ஆண்டுகள் முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் ஜலம் என்பது தூய தமிழ்ச சொல் என்று சொன்னார் . மேற்கொண்டு அவரிடம் இது பற்றி பேச முடியவில்ளை ,மீண்டும் சந்திக்கவும் இல்லை

 

இப்போது சில நாட்கள் முன்பு முகநூலில் நண்பர் வழிக்கரை வடிவேலன்             ஜ ,ஷ.ஸ ஹ இதெல்லாம் வடமொழி எழுத்துக்கள இல்லை . வடமொழியில் இது போன்ற எழுத்துக்கள் கிடையாது . தமிழ் ஒலி வடிவத்தின் எழுத்து வடிவங்கள்தான் என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார் .

 ராஜாஜியை இராசாசி என்றும். ஷேக்ஸ்பியரை செகப்பியர் என்றும் மாற்றுவது தவறு என்றும் சொல்லியிருந்தார்

 

அவர் தமிழில் ஆழமான ,பரந்த அறிவு உடையவர் . அவர் கூற்று சரியா என்பதை ஆராயும் அளவுக்கு எனக்குத் தமிழ்ப் புலமை கிடையாது

 

 பெயர்களை மாற்றுவது சரியில்லை என்பது என்னுடைய கருத்தும் ஆகும் .

குறிப்பாக் அரபு மொழியில் ஒரு எழுத்து மாறினால் கூட பொருள் மாறிவிடும்

 

ஆனால் எங்கள் பகுதி (மதுரை திருப்பத்தூரில் ) யில் ஜ, ஷ இதெல்லாம் வாயில் வராது . ஓரளவு படித்தவர்கள் கூட ராஜாவை ராசா என்றும், ரோஜாவை ரோசா என்றும் தான் சொல்வார்கள்

ஜப்பார் என்பது ஜ, சவுக்கு இடைப்பட்ட ஓசையில்,ஒலிக்கும் .

. ஆயிஷா  ஆசாவாகி விடும் ஷாம்பூ சாம்பு என்று வரும்

இதெல்லாம் இயல்பாக வருவது மற்றபடி  வடமொழியைத் தவிர்க்க வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் எண்ற எண்ணமெல்லாம் கிடையாது

 

சொந்த ஊரோடு  இப்போது பெரிய தொடர்பு ஏதும் இல்லை . எப்போதாவது எதாவது விழாக்களுக்குப் போனால் ஒன்றிரண்டு நாள் தங்கி வருவது அவ்வளவுதான் , அதனால் இப்போது பேச்சு வழக்கு மாறியிருக்கிறதா என்பது  தெரியவில்லை

 

சாம்பு என்றதும் எனக்கு துப்பறியும் சாம்பு நினைவுக்கு வருகிரது. இருபதாம்  நூற்றாண்டின் துவக்கத்தில்  மிகப் பரவலாக படிக்கப்பட்ட , பேசப்பட்ட ஒரு புதினம் – துப்பறியும் புதினம் அதோடு நகைச்சுவை சேர்ந்து இருப்பதோடு பல உண்மை நிகழ்வுகளின் காலக் கண்ணாடியாகவும் விளங்கிய இந்தப் புதினத்தை தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர் பெயர் மகாதேவன் . நான் அதிகம் இதைப்படிததில்லை .,நிறையக் கேள்விபட்டிருக்கிறேன்

 

இது தொடர்பாக இன்னொரு நகைச் சுவைக்கதை நினைவில் வருகிறது , ஒரு வீட்டில் தேங்காய் எண்ணெய் மிக அதிகமாக குடும்பத்தின் தேவைக்கு மேல் செலவாகிறது

வீட்டில் பணிபுரியும் பெண் எண்ணெயை பயன் படுத்துகிறாரோ என ஒரு ஐயம் . பணிப் பெண்ணோ வன்மையாக மறுக்கிறார்

எப்படி இதைக்கண்டு பிடிப்பது என்ற சிந்தனையில் ஷாம்ப்பூ கை கொடுக்கிறது . தேங்காய் எண்ணெய் நிறத்தில் இருக்கும் ஷாம்பூவை எண்ணெயோடு கலந்து விடுகிறார்கள்

 

வழக்கம்போல் பணிப்பெண் அதைத் தலையில் தேய்க்க தலை எல்லாம் ஒரே நுரை மயம் . என்னமோ எதோ என்ற அச்சத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார் பணிப்பெண்

 

இந்தக் கதைக்குப் பெயர் துப்பறியும் சாம்பு (ஷாம்பூ

 

 

 

மீண்டும் தமிழுக்கு வருவோம்  

 

ஷாம்பூவுக்கு இணையத்தில்  நான் கண்ட தமிழ்ச் சொல்

தலை நீவல், சவர்க்காரக் குழம்பு .

வேறு ஏதாவது சொல் தெரிந்தால் சொல்லாம்

இன்னும் சில சொற்களுக்கு சரியான , இயல்பான் தமிழ்ச் சொல் எனாக்குத் தெரியவில்லை

Main Road என்பதை முதன்மைச் சாலை என்கிறார்கள். பொருத்தமாகத்தான் இருக்கிறது

 

ஆனால் முக்கியமானவர்களில் ஒருவர் என்பதை முதன்மையானவர்களில் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டுமா இல்லை வேறு சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை

 

Relaxed ஓய்வாக, இளக்கமாக என வருகிறது. முழுப் பொருளும் தரும்படி வேறு இயல்பான சொல் இருந்தால் சொல்லுங்கள் .

 

சிகிச்சை – மருத்துவம் என்ற சொல் தவிர்த்து வேறு சொல் இருக்கிறதா ?

Surgery –அறுவை சிகிச்சை, அறுவை மருத்துவம் என்று சொன்னால் சற்று முரட்டுத் தனமாகத் தெரிகிறது.

 

 

– வட மொழி சொற்களுக்கு இணையான சில தூய தமிழ் சொற்கள்

இணையத்தில் கண்டவை

 

-அளவைப்பொலி  உள்ளப்போக்கு      இளிவரவு             முனிவருறையுள்

அற்றம்          கருங்கோள்             நீர்க்குடுவை

பொருள் புரிகிறதா ?

 

நிறைவாக ஒரு வேடிக்கை வினா

“உயிர்க் காலேசு , செத்த காலேசு “

எங்கள் ஊர் சிறப்புப் பேச்சு வழக்கு

என்ன பொருள் ?

 

இறைவன் நாடினால்  நாளையும் தமிழில் சிந்திப்போம்

 

௦௫ ௧௦ ௨௦௨௧ செவ்

050102021

சர்புதீன் பீ

 

 

தமிழ் – சில சிந்தனைகள் , கருத்துக்கள் 2

நேற்று சில தூய தமிழ் சொற்கள் கொடுத்து பொருள் புரிகிறதா என்று கேட்டிருந்தேன்

யாரும் விடை அனுப்பவில்லை

முயற்சித்த சகோ அஷ்ரப் ஹமீதாவுக்கு நன்றி

விடைகள்

அளவைப்பொலி- ஆபாசம்        உள்ளப்போக்கு-அபிப்ராயம்            

இளிவரவு –அவமானம்    முனிவருறையுள் –ஆசிரமம்

அற்றம்-இரகசியம்            கருங்கோள்- இராகு              நீர்க்குடுவை – கமண்டலம்

 

வேடிக்கை வினா- “உயிர்க் காலேசு , செத்த காலேசு “

விடை –

 உயிர்க் காலேசு விலங்கியல் பூங்கா – Zoo

செத்த காலேசு “  - அருங்காட்சியகம் Museum

சரியான விடை அனுப்பியவர்கள்  

சகோ பாப்டி ,பமீலா ,கணேச சுப்பிரமணியம் ராஜா சுப்பிரமணியம்

ராஜாத்தி (முதல் சரியான விடை – இரட்டைப் பாராட்டுகள் )

அனைவருக்கும் வாழ்த்துகள் ,பாராட்டுகள்

 

தனித் தமிழ் சரியா தவறா ? முடிவில்லாத ஒரு வினா

தனியோ இல்லையோ படிப்பவர்களுக்குப் புரியும்படி இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது

 

“மெய்ப்புல அறைகூவலர் “

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோருக்கான கழிவறையில் கண்ட அறிவிப்பு

Physically Challenged என்பதன் மொழி பெயர்ப்பு

இது எத்தனை பேருக்குப் புரியும் ?

 

ஆனால் மொழி சிதையாமல் காக்க தனித்தமிழ் தேவை என்ற கருத்தும் சொல்லப்படுகிறது

இதற்குக் காலம்தான் ஒரு விடை சொல்ல வேண்டும்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

௦௬ ௧௦ ௨௦௨௧ புதன்  

060102021

சர்புதீன் பீ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sunday, 3 October 2021

English Quiz -SLICKER


 A word with various widely different meanings, a few of which are:

Rain coat, crook and smooth job
What is that 7 lettered word starting with s?
Answer
Slicker
Greetings and Congratulations to
M/S
A R Viswanathan ,Ganesan Subramanian ,Selvakumar,Kankaraj ,
Raviraj (First to send )
Papti and Ashraf Hameeda
For correct answer.
A few of the very many meanings found in dictionaries
] : OILSKINbroadly : RAINCOAT
2[slick to defraud cleverly]
a(1): a clever crook : SWINDLER
done smoothly and well, and seeming to be done without any effort.
2.
clever at persuading people but perhaps not completely honest.
A person with stylish clothing and manners.
04102021mon
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

Friday, 1 October 2021

கதை -களம் ஓன்று காட்சி மூன்று


 களம் ஓன்று , காட்சி மூன்று

பரபரப்பும் போக்குவரத்தும் நிறைந்த அந்தச் சாலையில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் ஓன்று சற்று உயரமான கட்டிடத்தில் ..
கட்டிடம் உயர்ந்தது போல் உணவின் தாமும் உயர்வாகவே இருக்கும் . அந்தப்பகுதிக்கு வரும் மக்கள் பெரும்பாலும் அங்கே சாப்பிடாமல் போகமாட்டார்கள் .இன்னும் சொல்வதென்றால் அந்த உணவகத்தின் ரொட்டி குழம்பை சுவைக்கவே அக்கம் பக்கம் உள்ள ஊர்களிலில் இருந்தும் வருவதுண்டு
காட்சி 1
அரசு வண்டி ஓன்று- காவல் துறை வண்டி அந்த உணவகத்தின் வாசலில் வந்து நிற்கிறது . .உடனே உணவாக உரிமையாளர் பரபரப்பாகி, கையில் இருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு உயரமான படிகளை வேகமாகக் கடந்து இறங்கி வண்டியின் கதவைத் திறந்து விட்டு காவல் துறை அதிகாரியை வாழ்த்துக் கூறி வரவேற்கிறார் . கையைப் பிடித்து இழுக்காத குறையாக உணவகத்துக்குள் அழைத்துச் செல்கிறார் .
“ சும்மா உங்களைப் பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன் . எனக்கு தேநீர் மட்டும் கொடுங்கள் “ என்று சொன்ன அவரிடம் “ அதெல்லாம் முடியாது அத்தி பூத்தாற்போல் நீங்கள் வருகிறீர்கள் . சாப்பிடாமல் போக விடமாட்டேன் “ என்றதோடு பணியாளரை அழைத்து “ ஐயாவுக்குத் தனி அறையை சுத்தம் பண்ணி வை “ என்று சொல்ல “ தனியறையில் இடம் ஏதும் இல்லை “ என்கிறார் பணியாளர்
சரி என் தனி அறையைத் திறந்து சுத்தம் செய்து குளிரூட்டியைப் போட்டு விடு “ என்கிறார்
அதிகாரியோ , “ நான் அவசர வேலையாகப் போய்க்கொண்டிருக்கிறேன் . உங்களைப் பார்த்து விட்டேன் .. சுவையான் தேநீர் அருந்தி விட்டேன் . நன்றி நான் வருகிறேன் “ என்கிறார் .
:” ஒரு ஐந்து நிமிடம் பொறுங்கள் . பார்சல் கட்டித் தருகிறேன் “
என்று உரிமையாளர் வற்புறுத்த “ இல்லை இல்லை எனக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது “ என்று அவர் புறப்படுகிறார் .
அப்படியும் விடவில்லை உரிமையாளர் ‘” சரி , நான் உங்கள் வீட்டுக்கு கொடுத்து விடுகிறேன் , அவர்களிடம் தகவல் சொல்லி விடுங்கள் “ என்று சொன்னவாறு வண்டி வரை சென்று வழியனுப்பி வைக்கிறார் “பணம் வாங்குவதாக இருந்தால் அனுப்பி வையுங்கள் “ என்று அதிகாரி சொன்னதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை
அடுத்த காட்சி – ஒரு ஆறு மாதங்களுக்குப்பின்
அதே உணவகம் ,, அதே உ ரிமையாளர் அதே அதிகாரி படியேறி வருகிறார் . நேரே உரிமையாளரிடம் போய் “ சாப்பிட வந்திருக்கிறேன் “ என்கிறார் . அவரை கண்டும் காணாததும் போல் உரிமையாளர் தலையை நிமிர்த்தாமல் அதை என் என்னிடம் சொல்கிறீர்கள் என்பது போல் “ சாப்பிடுங்க “என்று சொல்கிறார் .
“தனியறை இருக்குமா “ என்கிறார் வந்தவர் . “பார்த்தால்தானே தெரியும் ” என்ற எகத்தாளமான விடை
கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பணம் செலுத்த வருபவருக்கு ஒரு நப்பாசை .-பணம் வேண்டாம் என்று சொல்லுவார் . நாம் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் பணத்தை செலுத்தி விட வேண்டும் என்று
ஆனால் மீண்டும் கண்டுகொள்ளாத உரிமையாளர் உரத்த் குரலில் “ யார் பில் போட்டது . கணக்கில் பத்து ரூபாய் விடுபட்டி ருக்கிறது” என்று சொல்கிறார் .
“ நீங்களாவது பார்த்து சரி செய்திருக்க வேண்டாமா “ என்று தன்னை சாடுவது போல் உணர்ந்த அதிகாரி பணத்தை செலுத்தி விட்டு சற்று மன வலியுடன் அமைதியாக் நடக்கிறார்
இந்த ஆறுமாதத்தில் ஏன் இந்த தலை கீழ் மாற்றம் ? புரிந்திருக்குமே ! நல்ல , நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி பணியை நிறைவு செய்து நல்ல பெயரோடு ஒய் பெற்று விட்டார்அவர் ஒரு வாரம் முன்பு
இங்கு பதவிக்குத்தான் மரியாதை , மனிதத்துக்கு அல்ல என்பது இப்போதுதான் அவருக்கு கொஞ்சம் புரிகிறது
மூன்றாவது காட்சி
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப்பின்
அதே உணவகம் . இப்போது சாப்பிட வருபவர் இருமுறை நாம் பார்த்தவரின் மகன் . அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றில் உயர பதவி வகிக்கும் அவர் அந்த ஊருக்குப் பணி நிமித்தம் வந்து தங்கி இருக்கிறார்
பழைய நினைப்பில் அந்த உணவகத்துக்கு சாப்பிடவருகிறார் . உணவகத்தின் வெளிதோற்றமே மாறுபட்டு இருகிரது. உயரம் குறைந்து பொலிவு இல்லாமல் இருந்தாலும் உணவின் தரம் அப்படியே இருக்கும் என்ற நினைப்பில் உள்ளே நுழைகிறார் . உள்தோற்றமும் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை
ஒரு இருக்கையில் உட்காருகிறார் . . ஒரே அமைதி . ஐந்து நிமிடகழித்து “ என்ன வேண்டும் “ என்று குரல் மட்டும் வருகிறது – ஆளைக்காணோம் . “புரோட்டா , குருமா “ என்று சொல்கிறார் . மீண்டும் சற்று நீண்ட அமைதி .பிறகு ஒருவர் வந்து “என்ன சாப்பிடுகிரீர்கள “ என்கிறார் “.ஏற்கனவே வேறு ஒருவரிடம் சொல்லி விட்டேனே “ என்று இவர் சொல்ல மீண்டும் பழையகுரல் “ இல்லை , நானில்லை இவரிடம்தான் சொல்லவேண்டும் “ என்று சொல்கிறது
முதலில் தண்ணீர் கொடுங்கள் பிறகு ரொட்டி குருமா “ என்று சொல்ல தண்ணீர் உடனே வந்து விடுகிறது
ஒரு பத்து நிமிட இடைவெளிக்குப்பின் “ரொட்டி குருமா கொஞ்சம் பழசாக இருக்கும் . நீங்கள் சொன்னால் சுட வைத்துத் தருகிறேன் வேண்டுமா ?” என்கிறார் பணியாளர்
“ வேண்டாம் வேண்டாம் புதிதாக என்ன இருக்கிறது ?”
“ சமோசா – மட்டன் சமோசா நன்றாக இருக்கும் முந்தாநாள் மாலைதான் போட்டது . சுட வைத்துக் கொண்டு வரவா /”
“வேண்டாம் வேண்டவே வேண்டாம் “ என்று அலறியவாறு வெளி நடக்கிறார் வந்தவர்
வந்த இடத்தில் வயிறு கெட்டுப்போகாமல் காப்பாற்றிய இறைவனுக்கும் , உண்மையை உரைத்த பணியாளருக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறார்
பதவியில் இருக்கும் அதிகாரிகள் பணி ஓய்வு பெறுவது போல் உணவகங்களும் ஓய்ந்து , ஒய்வடையும் என்பது ஒரு இயற்கை நிகழ்வு போலும்
வழக்கமான என்னுடைய கதைகள் போல் இதுவும் கொஞ்சம் கற்பனை கலந்த உண்மைக் கதைதான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௨ ௧௦ ௨௦௨௧ சனி
02102021
சர்புதீன் பீ
May be an image of food
Musthafa Qasimi