Sunday 5 May 2024

கவிதை 03/06052024

 






03/06052024 போட்டிக்கான பதிவு  

: தலைப்பு

          நிழல்

 

 

 “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

     குளிர் தருவே தருநிழலே என வள்ளலார்

 பாடிய  அருமைத் தலைப்பு நிழல்

 

 

நிழல் நிஜமாகிறதாநிஜம் நிழலாகிறதா

விடை காண முடியாத   வினா

 

வளர்ந்து தேயும் வெள்ளை நிழல் நிலவு

அந்த நிழலின் ஒளியிலும் உண்டாகும் மெல்லிய நிழல்கள்

 

நிழலான செயல்களைத் தவிர்த்து

நிழல் தரும் மரங்களை வளர்த்து

வளம்பெற வாழ்வோம்

 

சர்புதீன் பீ06 05 24

Sunday 28 April 2024

வெளியிடாத கவிதைகள்

 போட்டிக்கான பதிவு

            தேடல்கள்


சிந்திக்க வைக்கும் சீரிய தலைப்பு


தேடாமல் தேடிவரும் பாசமும் பரிவும்


தேடிப் பெறும் பதவிகள் படிப்புகள்


தேடியும் தேடாமலும் கிடைக்கும் சில செல்வங்கள் இனிமைகள்


தேடாமலும் தேடியும் கிடைக்கும் நட்புகள் உறவுகள்


தேடிக் கிடைக்காமல் போன சில புளிப்புப் பழங்கள்


தேடிப் பெற்றதாய் நினைத்து ஏமாந்த அறிவும் ஞானமும்


இதையெல்லாம் தாண்டி நிறைவில்லா தேடல் ஒன்று


"எதைத் தேடிப் பயணிக்கிறேன்"

என்ற கேள்வி


கவிதை 26/29042024

 போட்டிக்கான பதிவு



 26042024 

தலைப்பு 

உழைப்போம்உயர்வோம் 


 ஏர் உழுவதும் உழைப்புதான்


தேர் இழுப்பதும் உழைப்பே


கார் ஓட்டுவதும் உழைப்புதான்


அறிவியல் ஆராய்ச்சியும் உழைப்புதான் 


ஆயகலைகளை பயில்வதும் உழைப்புதான் 


கற்பதும்  உழைப்புதான் 

கற்பிப்பதும் உழைப்புதான்


கவிதையும் உழைப்பில் மலர்ந்த பூவே


உழைப்பில்லையேல் உலகம் இல்லை 


கற்போம் கற்பிப்போம் 

 உயர உயர பறப்போம் உழைப்பால் 


சர்புதீன் பீ 







கவிதை 26/29042024


Wednesday 24 April 2024

மீண்டும் விடுமுறை 2504 2024 வியாழன்

 






மீண்டும்

விடுமுறை
2504 2024 வியாழன்
எதிர்பார்த்த சில காரணங்களால் பதிவுகளுக்கு
ஒரு மாதம்விடுமறை
இறைவன் நாடினால் மீண்டும் விடுமுறைக்குப்பின் சிந்திப்போம்
முகநூல் நினைவுகள் அவ்வப்போது பகிரப்படும்
2504 2024 வியாழன்
சர்புதீன் பீ

குழந்தையும் தெய்வமும் ,கதையல்ல உண்மை 24042024புதன்






 குழந்தையும் தெய்வமும் 


,கதையல்ல உண்மை


24042024புதன்


பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.


ஆனால் அன்றைக்கோ  வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்.


    

இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.


அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்.


அந்தப் பெண்ணின் அக்காள் துணைவர் அந்தப் பையனை கண்டிக்கிறார்.


பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது.


தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.


மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.


குழந்தை அழத் தொடங்குகிறது.


ஒரு‌பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.


ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.


நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.


அந்தக் கோயிலை ஒட்டியுள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்கிறான்.


பொழுதடைய கோவிலைச் சாத்த குருக்கள் வரும்போது குழந்தையின் முனங்கல் கிணற்றுக்குள் லிருந்து கேட்க குருக்கள் எட்டிப்பார்க்கிறார்.


குழந்தை யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.


பொதுமக்கள் சேர்ந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்.


காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.


ஒரு மணிநேரத்தில் காவல்துறை பெற்றோரைக் கண்டுபிடிக்கிறது.


குழந்தையைக் காணவில்லை என்று யாராவது புகார் கொடுத்து 

இருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து ஒரே மணிநேரத்தில் நெல்லை காவல் துறை மதுரையில் இருக்கும் பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள்.


இரவோடு இரவாக பெற்றோர்கள் நெல்லை வந்து சேர்கிறார்கள்.


அடுத்த வினாடி குற்றவாளி நெல்லையில் கைது செய்யப் படுகிறார்

   

காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அப்புறமாக சட்டரீதியான நடவடிக்கைக்குப் பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவே அந்தக் கூட்டம்.

  

தன்னைக் காப்பாற்றிய அந்த யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடியே குழந்தையை ஒரு பெண்காவலர் கொண்டுவந்தார்.


அதைப் பார்த்ததும் அந்தத் தாய் அழுத அழுகை அனைவரின் கண்களும் பனித்தன.


தெய்வ அருள் பெற்ற குழந்தை என்றார் நீதியரசர் 

       

  

இனி வருவது மெய்சிலிர்க்கச்செய்யும் உணர்ச்சிகரமான புல்லரிக்க வைக்கும் உச்ச கட்டம் 


வழக்கமாக அந்தக் கோவிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளும் கேட்காது 


அன்றைய தினம் திடீர் உடல்நலக் கோளாறினால் தன்னுடைய மருமகனை அனுப்பியிருக்கிறார்.


அந்த காதுகேளாத குருக்கள் அன்றைக்கு வந்திருந்தால் குழந்தையின் முனங்கல் கேட்டிருக்காது.


குழந்தை இரவுமுழுக்க தண்ணீரில் மிதந்து விறைத்து இறந்திருக்கும்.


புரிந்துகொள்ளுங்கள்

இதற்குப் பெயர்தான் இறைவன் என்பது.


(முன்பு எப்போதோ படித்தது

உண்மை நிகழ்வு என்று பதிவு செய்யப்பட்டது)


இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம் 


24042024 புதன் 

சர்புதீன் பீ