திருமறை குரான்
111:2
31012025 வெள்ளி
திரு மறையில் எந்தப் பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சூரா111 லஹப் .(நெருப்பு).
வசனம் 2
. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. 111:2
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்:
சகோ
ரவி ராஜ் -
முதல் சரியான விடை
சிறப்புப்பாராட்டுகள்
கத்தீபு மாமூனா லெப்பை
ஷர்மதா
ஷிரீன் பாரூக்
தல்லத் &
ஹசன் அலி
பங்கெடுத்த சகோ பீர் ராஜா (2:79) வுக்கு நன்றி
விளக்கம
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
PlayCopyWordByWord111:2111:2. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
PlayCopyWordByWord111:3
1:111:3. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவான்.
PlayCopyWordByWord111:4
: ۚ111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ -
PlayCopyWordByWord11111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் இருக்கும்; அதனால், அவளும் அழிவாள்
தனி ஒருவரை பெயர் குறிப்பிட்டு இறைவன் சபிப்பது திரு மறையின் இந்த சூராவில் மட்டும்தான்
பல வகைகளில் நபி பெருமான் (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினர் ஆன அ பூ லஹப் உறவை முறித்து பாசத்தை மறந்து இஸ்லாமிய எதிர்ப்பையும் நபி ஸல் அவர்களுக்கு முடிந்த வரை தீங்கு செய்வதையும் தன் முழு நேரப் பணியாக மேற்கொண்டான்
அவன் துணைவியும் இதில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்
கருணையே உருவான இறைவனுக்கே பொறுக்க முடியாத அளவுக்கு இந்தக் கொடுமைகள் அதிகரித்தூ வந்தன
இந்த சூரா அருளபட்ட பின் பல ஆண்டுகள் அபூலஹப் துணைவி இருவரும் உயிர் வாழந்தும் அவர்கள் திருந்தவில்லை
இறைவனின் வாக்கு மெய்யாகி விட்டது
கடுமையான சொல் ,பொருளைக் கொண்ட இந்த சுறாவை சிலர் ஓதாமல் தவிர்ப்பது தவறு
திரு மறையின் ஒவ்வொரு வழுத்தும் சொல்லும் இறைவன் அருளிய கொடை
இதில் தரம் பிரித்துப் பார்க்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
01 ஷாபான் (
1446

31012025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment