Tuesday, 25 March 2025

ரமளான் பதிவு 25 சுரா 67 முல் க் (ஆட்சி) 26 032025 புதன்





 ரமளான் பதிவு 25

சுரா 67 முல் க் (ஆட்சி)
26 032025 புதன்
உங்களை சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
என்ற கருத்து
எந்த திரு மறை வசனத்தில் வருகிறது ?
விடை
சூ ரா 67 மூல்க் வசனம் :2
67:2. உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
சிராஜூதீன் முதல் சரியான விடை
,மெ க கராஜ்
ஷர் ம தா &
ஷிரீன் பாரூக்
இந்த வசனம் நமக்கு சொல்லும் செய்திகள்
பிறப்பு இறப்பு -இறைவன் அதிகாரம் ,உரிமை
இறைவன் வாழ்நாளைக் கொடுத்தது ஒரு சோதனைக்கே
இந்த சோதனைக்காக இறைவன் மனிதனுக்கு செயல்பட வாய்ப்பு அளிக்கிறான்
அதில் நல்லது செய்வதா இல்லை அல்லது செய்வதா என்பதை மனிதனே தெரிந்தெ டுக்கிறான்
மனிதனின் செயல் நல்லதா இல்லையா என்பதை இறைவன்தான் முடிவு செய்கிறான்
மனித வாழ்வின் மேல் முழு ஆட்சி அதிகாரம் கொண்ட இறைவன் பெரிதும் கருணையும் மன்னிக்கும் குணமும் உள்ளவன்
சூரா அல் முல்க் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் அவன து படைபபுகளின் சிறப்பையும் வலியுறுத்துகிறது,
இறைவனின் சக்தியின் அறிகுறிகளைப் பற்றி சிந்திக்க நம்பிக்கை கொண்டவரை வலியுறுத்துகிறது
தீயவர்களுக்கான நரகம் பற்றி விவரிக்கிறது
67:6. இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
ُۙ‏
67:7. அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலையில் (கழுதையின் பெருங் குரலைப்போல்) அருவருப்பான சப்தம் அதற்கு இருப்பதை அவர்கள் கேட்பார்கள்.
67:8. அது கோபத்தால் வெடித்துவிடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார். ஆனால், நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை' என்று சொன்னோம்."
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள்
67:16. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் புதையச் செய்துவிடுவான் என்பதைப் பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது அது (பூமி) நடுங்கும்.
67:17. அல்லது, வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மழையை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இறைவனின் மாட்சிமை பற்றி
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்குமேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக்கொண்டிருக்கவில்லை; நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
பதிருப்போரில் வெறும் 300 இஸ்லாமிய வீரர்கள் தகுந்த ஆயுதங்கள் குதிரைகளஒட்டகங்கள் எதுவும் இல்லாமல் 1000 பேர் கொண்ட வலுவான எதிரிப்படையை வீழ்தியாது இறைவன் அரு ளால் மட்டுமே
போர் நடந்தது புனித ரமளான் மாத்அதில்
67:20. அன்றியும், அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எவர் உங்களுக்குப் படைத்துணையாக இருந்து, உதவி செய்வார்? நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை
மீண்டும் ஒரு அச்சமூட்டும் ம் வசனத்துடன் சூ ரா நிறைவு பெறுகிறது
67:30. (நபியே!) நீர் கூறும்: "உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதைக் கவனித்தீர்களா? (என்று எனக்கு அறிவியுங்கள்)
இன்றைய வினா
அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்ட கைதிக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76:8)
இந்த சிறிய வசனத்தின் பின்னணியாக ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு இருக்கிறது
(பள்ளிவாசலில் உரையில் காதில் விழுந்தது )
அது என்ன ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை கு சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
25 ரமளான் (09) 1446
26 032025 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment