Thursday, 12 June 2025

திரு மறை குரான் 12:15 1306 2025 வெள்ளி


 



திரு மறை குரான்

12:15
1306 2025 வெள்ளி
-----அவர்கள் செயல் பற்றி நீங்கள் அவர்களுக்கு நினைவு படுத்தும் நேரம் வரும் ---
என்ற கருத்து வரும் திருமறை வசனம் எது ?
விடை
சூ ரா 12 யூஸுஃப் வசனம் 15
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.(12:15)
:
சரியான விடை எழுதிய ஒரே சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்
முயற்சித்த சகோ சி(ராஜூதீனுக்கு நன்றி
தொடர்ந்து ஆர்வமுடன் பங்கெடுக்கும் சகோ
ரவி ராஜுக்கு சிறப்பு நன்றி (இருவரும் அனுப்பியது ஒரே விடை )
விளக்கம்
நபி யூஸுஃப் அலை – சுவையான நீண்ட வரலாறு
அவருக்கும் , அவரைப் பற்றி முழுமையாகச் சொல்லும் சூ ரா 12 க்கும் உள்ள மிகப்பல சிறப்புகள் பற்றி விளக்கமாக பலமுறை எழுதியிருக்கிறேன்
இந்த வசனம் பற்றி மிகச் சுருக்கமாக :எழுத முயற்சிக்கிறேன்
யக்குப் நபி தன் இளைய துணைவியின் மகன் யூசுப் நபியின் மேல் காட்டும் அளவுகடந்த அன்பு,பாசத்தினால் அழுக்காறு கொண்ட மூத் த துணைவியின் மக்கள் வேட்டைக்கு போகும்போது சிறுவன் யூசுபை கூட்டிச் சென்று ஒரு ஆழமான கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு தந்தையிடம் ஓநாய் தூக்கிக்கொண்டு போனதாக பொய் சொல்கிறார்கள்
கிணற்றில் இருந்த சிறுவனை தற்செயலாக மீட்கப்பட்ட சிறுவன் அந்நாட்டு மன்னரிடம் விற்று விடுகிறார்கள்
அவரின் அதீத அழகே அவருக்கு செய்யாத குற்றத்திற்கு தண்டனைக்கு காரணமாக இருக்கிறது
சிறையில் யூசுப் நபி சொன்ன கனவுகளின் பலன் பற்றி அறிந்த மன்னர் அவரின் மேன்மையை புரிந்து அவருக்கு மிகப்பெரும் பதவியான உணவுப் பொருள் பொறுப்பு அமைச்சராக ஆக்குகிறார்
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட, யூசுப் நபியின் மாற்றந்தாய் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க அவரிடம் வருகிறார்கள்
அவர்களுக்கு யூசுப் நபியை தெரியவில்லை
ஆனால் நபி அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தம்மை கிணற்றில் போட்டதை நினைவு படுத் துகிறார்
இது பற்றி சிறுவன் யூசுப் கிணற்றில்
போடப்பதும்போதே இறைவன் இறை செய்தி வஹீ மூலம் அவருக்கு அறிவிக்கிறான்















இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16 துல்ஹஜ் (12 ) 1446
13 06 2025 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 10 June 2025

முத்திரை பதிப்போம் ,18 வஜ்ர முத்திரை 11062025 புதன்

 

 


முத்திரை பதிப்போம் ,18

வஜ்ர முத்திரை

11062025 புதன்

மீண்டும் ஒரு எளிய முத்திரை வஜ்ர முத்திரை

செய்முறை

வசதியான, தளர்வான நிலையில் (சுகாசனம், வஜ்ராசனம் அல்லது பத்மாசனம்) உட்காரவும்.

கைகளை முழங்கால் மீது வைக்கவும்,

, ஆள்காட்டி விரலை(index finger ) நீட்டி வைக்கவும்

 

 

மற்ற  விரல்களை கட்டை(விரல்*Thumb) நுனியில்  சிரிது  அழுத்தி வைக்கவும்

மூச்சை ஆழமாக இழுத்து , மெதுவாக வெளியேற்றுங்கள்.

சில நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம்

 

பலன்கள்

 

 , குருதி  ஓட்டத்தை மேம்படுத்தும் .

 எனவே

குறைவான குருதி ஓட்டம் உள்ளவர்களுக்கு, குறைந்த குருதி  அழுத்தம் (Low BP உள்ளவர்களுக்கு இது மிகவும்பயனுள்ளது .

 

. இது மூளையின் செயல்பாட்டையும் அறிவுத் திறனையும் மேம்படுத்தூக்கிறது 

 மனக் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது  

 

 

 

 

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது .

 

 

 

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தலைச்சுற்றல்,  சோ ம்பலை நீக்குகிறது.

அறியாமையை ஞானமாக மாற்றுகிறது.

 

 

(வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது)


·         

·        இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.

·        வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

·        .

·        மன அமைதி உண்டாகும்.

·         

·        .

·         

·        மன அழுத்தம் குறையும்.

·         

·        எச்சரிக்கை

·        அதிக குருதி அழுத்தம்( high BP)உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

·        பொதுவாக முத்திரை ளில் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது அப்படி இருப்பது போல தோன்றினா ல் உடனே பயிற்சியை விட்டு விடுங்கள்

 

செய்து பாருங்கள்

உணரந்ததை எழுதுங்கள்

இறைவன் நாடினால் நாளை குரானில்  சிந்திப்போம்

 

11062025 புதன்

சரபுதீன் பீ

 



 

Monday, 9 June 2025

English QUIZ Anthem 10062025 Tue





 English QUIZ

Anthem
10062025 Tue
A popular word with 6 letters initial letter A
More than 3 well known words can be made out of these letters
The word as a whole indicates a sort of song –very important one
What is that word?
Answer
Anthem
An anthem is a song of loyalty, devotion, or praise, particularly for a nation, group, or cause. It's often sung on special occasions and serves as a symbol of identity or unity. –
example National Anthem
Greetings and Congratulations to those who sent correct answers:
M/S
Soma Sekar - instanat first correct
answer
Sirajuddin
Meharaj
Venkatesan &
Viswanaathan AR
Let us meet tomorrow by His Grace
09062025 Mon
SherfuddinP

Sunday, 8 June 2025

தியாகத் திரு நாள் வாழ்த்துகள் 07062025 சனிக்கிழமை

 



அமைதியும் சாந்தியும் சமாதானமும் எங்கும் எல்லோரிடத்தும் பரவட்டும்

இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்
நீளாயுளும்
நல்ல உடல் மன நலமும்
நிறை செல்வமும்
ஓங்கு புகழும்
உயிர்மெய் ஞானமும் கொண்டு
செல்வச்சீமாட்டிகளாய்
சீமான்களாய்
கண்ணியம் மிக்க வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
தியாகம் ஈகை இதுதான் திருநாளா
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இதெல்லாம் இல்லையா!
இருக்கிறது
புத்தாடை அணிந்து சிறப்பான உணவு உண்டு உற்றார் உறவினர்களுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
அதையெல்லாம் தாண்டி
மனித குல வழிகாட்டி மாமனிதர் இப்ராஹிம் நபிஸல் அவர்கள் செய்யவிருந்த மகத்தான தியாகத்தை நினைவு கொள்வோம்
அந்த வகையில் இறைவன்
நமக்கு வாரி வழங்கிய செல்வங்களில் ஒரு விலங்கை குர்பானி செய்கிறோம்
அந்த குர்பானிலும் கலந்த ஈகை
மூன்றின் ஒரு பங்கு இல்லாதாருக்க
அதுவும் நல்லதாக கொடுக்க வேண்டும்
மீண்டும் தியாகத் திருநாள்
வாழ்த்துகள்
07062025
சர்புதீன் பீ

ஆடு ஜீ விதம் 0806026 ஞாயிறு

 

 

 




ஆடு
ஜீ விதம்

0806026 ஞாயிறு 

 

2.00,00,00,00.000

இரண்டுக்குப்பின் 11 சுழியன்கள்

20 ஆயிரம் கோடி

எதற்கு இவ்வளவு பெரிய எண் ?

தொ டர்ந்து படியுங்கள்

ஏறத்தாழ 150 கோடி இந்திய மக்கள் தொ கை

அதில் இஸ்லாமியர் கள்

20 கோடி

அதில் கூட்டு சேராமல் தனியாக குர்பானி கொடுப்போர்  

2 கோடி

ஒரு ஆடு 10 ஆயிரம் என்றால்

2 கோடி x 10000= 20 ஆயிரம் கோடி

இவ்வளவு பெரிய தொகையின் பயனை  அடைவது

பெரும்பாலும் சிறு, குறு ,நடுததரஉழவர் பெருமக்களும் நிலமற்ற உழைப்பாளிகளும்தான்

50 ஆட்டுக்கு ஒரு பணியாளர் என்றால்

4 லட்சம் பேருக்கு வே லை வாய்ப்பு

இதெல்லாம் அவர்கள் வாழ்வில் ஒரு அளவுக்கு பொருளாதார முன்னேற்றத் தை ஏற்படுத்தும்

அடுத்து  இன்னொரு கோணம்

தலை, கால்  போன் ற உதிரி பாகங்கள் போக ஒரு ஆட்டுக்கு 10 கிலோ எடை என்றால் 2 கோடி ஆட்டுக்கு

20  கோடி கிலோ எடை

ஒரு கிலோவுக்கு 5 பேர் சாப்பிடலாம் என்றால்

100 கோடி பேர் சாப்பிடலாம்

உறுதியாக இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது

மொத்தமே இந்தியாவில் 20 கோ டி தானே  !

எனவே சாதி மத வேறுபாடு இன்றி குர்பான் கறி அனைவரையும் சென்று அடைகிறது என்பது மறுக்க முடியாத உண்மை

இந்த அளவுக்க சமுதாய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் குர்பானி இறைவனின் கட்டளை நபி வழி ஒழுங்கு

எனக்கு மனம்  ஒப்பவில்லை, பிடிக்கவில்லை என்பது அந்த இறைவன் ஆணையை நபி வழி ஒழுங்கை மீறுவதாகும் 

இதை திருப்பித் திருப்பி சொல்வது எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்

Sharing is caring

இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்   சிந்தி ப்போம்

 

08062025 ஞாயிறு

சர் புதீன் பீ

(07062025 தியாகத் திருநாள் சிறப்புத் தொழுகையில் இமாமின் உரை

காதில் விழுந்ததை தொகுத்து  சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன்

பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் )

 

Thursday, 5 June 2025

துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 10 நபி ஸல் அவர்களின் விடைபெறு பேருரை 06 - 0 6 2025 வெள்ளி

 






துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 10

நபி ஸல் அவர்களின் விடைபெறு பேருரை

06  - 0  6 2025  வெள்ளி

 

நேற் றை ய வினா

 

உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்;

எங்கே, எப்போது, யார் சொன்னது ? 

 

விடை

இது சுரா 05 அல் மாயிதா வில் வசனம் 3  இன் ஒரு பகுதி

(5:3) உங்களுக்குச் செத்த உடல்9 இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வின் பெயரால் அல்லாமல் வேறு எந்தப் பெயராலும் கொல்லப்படும் விலங்கு10 கழுத்தை நெரிக்கப்பட்ட, அடிகளால் கொல்லப்பட்ட, விழுந்து இறந்த, குத்திக் கொன்ற அல்லது வேட்டையாடும் மிருகத்தால் தின்ற விலங்கு - அது உயிருடன் இருக்கும்போது நீங்கள் படுகொலை செய்திருக்கக்கூடியதாக இருந்தாலும் 11 - பலிபீடங்களில் கொல்லப்பட்டாலும் தவிர. 12 - 13 அம்புகள் மூலம் உங்கள் விதியைப் பற்றிய அறிவைத் தேடுவதும் உங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 14 இவை அனைத்தும் பாவச் செயல்கள். இன்று காஃபிர்கள் உங்கள் மதத்தைப் பற்றி முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; ஆனால் எனக்கு அஞ்சுங்கள். 

 

15 இன்று நான் உங்கள் மதத்தை உங்களுக்காக முழுமையாக்கியுள்ளேன், மேலும் எனது அருளை உங்களுக்கு முழுமையாக வழங்கியுள்ளேன், மேலும் இஸ்லாத்தை உங்

களுக்கு மதமாக ஆக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (எனவே, உங்களுக்கு விதிக்கப்பட்ட சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான வரம்புகளைப் பின்பற்றுங்கள்.) 16 பசியால் உந்தப்பட்டு, வேண்டுமென்றே பாவம் செய்யாமல் இருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். 17

 

தடுக்கபட்ட உணவுகள் பற்றி சொல்லும் இந்த வசனத்தின் பிற்பகுதியில்

மதம் முழுமை ஆக்கப்பட்ட செய்தி வருகிறது

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் சகோ

 

மெஹராஜ் – முதல் சரியான விடை

 

சீராஜூதீன் &

ஷர்மாதா

  

வசனம் எங்கே ரப்போது அருளப்பட்டது என்பது பற்றி யாரும் சரியாகச் சொல்லவில்லை

இது பற்றி பல கருத்துக்கள் உள்ளன

அதில் ஒன்று நபி ஸல் அவர்களின் விடைபெறு பே ருரையின் நிறைவுப் பகுதியில் அருளப்பெற்றது என்பது

 

நீண்ட பேருரை சுருக்கமாகப் பார்ப்போம்

 

 நபி ஸல் அவர்கள் தம்  நிறைவு  ஹஜ்ஜின் பொழுதுதுல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.கள்  

 மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்தது  

 

உரையின் ஒவ்வொரு வசனமும் மிக நுணுக்கமாக சான்றுகளூ டன் பதியப்பட்டுள்ளது  

தொடக்கவுரை.

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

 

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

 இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

 

குழப்பம்  செய்யாதீர்கள்!

உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

பணியாளர்களைப் பேணுவீர்![

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

 

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைக்கப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது

முறதவறி நடக்காதீர்!

 

உரிமைகளை மீறாதீர்!

 

 இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

 உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.

 

உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

 

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

+

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுக்கப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

[

 

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

நிறைவு  இறை வசனம்.

 

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

 

இன்றய வினா எதுவும் இல்லை

இறைவன் அருளால் நாளை தியாகத் திரு நாள்

 சிந்தனயீல் சந்திப்போம் 

 

 

  

 

நம்மில் உடல் நலம் , பணநலத்தில்  தகுதி உள்ள அனைவருக்கும் புனித ஹஜ் பயண வாய்ப்பை வரும் ஆண்டுகளில்  அருள இறைவனை இறைஞ்சுவோம்

 

ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஒ பபவில்லை என்று சொல்கிறார்கள்

இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?

இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து  மனம் உவந்து செயல்படுவோம்

 

Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்   

தொடர்ந்து பத்து நாள் பதிவுகள் வெளியிட அருளிய இறைவனுக்கு நன்றி

பதிவுகளைபபடித்து விடை அனுப்பியோர் , கருத்துகள் தெரிவித்தோர்

பிழைகளை சுட்டிக்  காட்டியோர் அனைவருக்கும் நன்றியுடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்

9    துல் ஹஜ் (12)  1446

06    0 6 2025 வெள்ளி

சர்புதீன் பீ