திரு மறை குரான்
-----அவர்கள் செயல் பற்றி நீங்கள் அவர்களுக்கு நினைவு படுத்தும் நேரம் வரும் ---
என்ற கருத்து வரும் திருமறை வசனம் எது ?
விடை
சூ ரா 12 யூஸுஃப் வசனம் 15
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.(12:15)
:
சரியான விடை எழுதிய ஒரே சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்
முயற்சித்த சகோ சி(ராஜூதீனுக்கு நன்றி
தொடர்ந்து ஆர்வமுடன் பங்கெடுக்கும் சகோ
ரவி ராஜுக்கு சிறப்பு நன்றி (இருவரும் அனுப்பியது ஒரே விடை )
விளக்கம்
நபி யூஸுஃப் அலை – சுவையான நீண்ட வரலாறு
அவருக்கும் , அவரைப் பற்றி முழுமையாகச் சொல்லும் சூ ரா 12 க்கும் உள்ள மிகப்பல சிறப்புகள் பற்றி விளக்கமாக பலமுறை எழுதியிருக்கிறேன்
இந்த வசனம் பற்றி மிகச் சுருக்கமாக :எழுத முயற்சிக்கிறேன்
யக்குப் நபி தன் இளைய துணைவியின் மகன் யூசுப் நபியின் மேல் காட்டும் அளவுகடந்த அன்பு,பாசத்தினால் அழுக்காறு கொண்ட மூத் த துணைவியின் மக்கள் வேட்டைக்கு போகும்போது சிறுவன் யூசுபை கூட்டிச் சென்று ஒரு ஆழமான கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு தந்தையிடம் ஓநாய் தூக்கிக்கொண்டு போனதாக பொய் சொல்கிறார்கள்
கிணற்றில் இருந்த சிறுவனை தற்செயலாக மீட்கப்பட்ட சிறுவன் அந்நாட்டு மன்னரிடம் விற்று விடுகிறார்கள்
அவரின் அதீத அழகே அவருக்கு செய்யாத குற்றத்திற்கு தண்டனைக்கு காரணமாக இருக்கிறது
சிறையில் யூசுப் நபி சொன்ன கனவுகளின் பலன் பற்றி அறிந்த மன்னர் அவரின் மேன்மையை புரிந்து அவருக்கு மிகப்பெரும் பதவியான உணவுப் பொருள் பொறுப்பு அமைச்சராக ஆக்குகிறார்
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட, யூசுப் நபியின் மாற்றந்தாய் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க அவரிடம் வருகிறார்கள்
அவர்களுக்கு யூசுப் நபியை தெரியவில்லை
ஆனால் நபி அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தம்மை கிணற்றில் போட்டதை நினைவு படுத் துகிறார்
இது பற்றி சிறுவன் யூசுப் கிணற்றில்
போடப்பதும்போதே இறைவன் இறை செய்தி வஹீ மூலம் அவருக்கு அறிவிக்கிறான்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16 துல்ஹஜ் (12 ) 1446
13 06 2025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment