மூலிகை அறிமுகம்
கத்தரிக்காய்
09042025 புதன்
சாம்பார் என்றாலே
கத்தரிக்காய் நினைவில் வரும்
பெரிய அளவில் வரும்
கத்தரிக்காயை சுட்டுப் பிணைந்து செய்யும சட்னி
தோசைக்கு மிகப்
பொருத்தமான சுவையான பக்க உணவு
காம்பை மட்டும் நீக்கி
நீளவாக்கில் நான்கு கீறல் கீறி கறிக்குழம்பில் போடுவது அம்மாவின் சிறப்புத்
தயாரிப்புகளில் ஒன்று
குழம்பில் ஊறிய
கத்தரிக்காயை ஒருவருக்கு ஒன்று கொடுப்பார்கள்
கத்தரிக்காய் குழம்பு
துணைவியின் சிறப்பு தயாரிப்பு
இன்னும் எண்ணெய்
கத்தரிக்காய்
க பஜ்ஜி என அன்றாட உணவில்
பின்னிப் பிணைந்த
கத்தரிக்காயில் உள்ள
மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம்....
இதில் உள்ள நீர்ச்சத்து,தோலை மென்மையாக்கும்
கத்திரிக்காயில்
வைட்டமின் சி,
மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
கத்திரிக்காய்
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
முதல்கட்ட சிறுநீரகக்
கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன்
முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
நினைவாற்றல்
அதிகரிக்கும்.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்
கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மூளை
செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
முற்றிய பெரிய காய்களைச்
அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.
புற்றுநோய் வராமல்
காக்கும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன
கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும்
குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது.
இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
உடலில் சேர்ந்த
அதிகப்படியான இரும்புசத்தை சமன்படுத்தும்.
நாம் சாப்பிடும் மற்ற
உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள
வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது.
பசியின்மை அகல்கிறது.
உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது
முதலியவையும் தடுக்கப்படுகிறது.
சர்க்கரை நோயைத்
தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’
அதிக அளவில் இருக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக்
கட்டுப்படுத்தி,
மன அமைதியைத் தரும்.
உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள்
கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.
உடலுக்குச் சூடு தரும்
காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
(,முக நூலில் இருந்து)
பொதுவாக நம் உணவில்
காய்கறிகள் பயன்பாடு பெரிதும் குறைந்து வருகிறது
அதுவும் கத்தரிக்காய்
போன்ற நாட்டுக் காய்களை இளைய தலைமுறையினர் தொடுவதே இல்லை
இது எல்லாம் எங்களுக்கு
தெரியும் என்ற அறியாமையின் விளைவு
அசைவ உணவுகள்
நாட்டுக் காய்கறிகள்
பழங்கள் எல்லாவற்றையும் சாப்பிட்டு நலமுடன் வளமுடன் வாழ இறைவனை அருள் புரிவானாக
இறைவன் நாடினால் நாளை
குரானில் சிந்திப்போம்
09042025 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment