தமிழ் (மொழி) அறிவோம்
போந்தை
14042025 ஞாயிறு
ஒரு ஊரின் பெயரைக்
குறிக்கும் மூன்றெழுத்துச் சொல்
பண்டைய இலக்கியத்தில் ஒரு
பூவின் பெயர்
முதலும் மூன்றும்
வல்லினம்
இடையில் உள்ள மெல்லின
ஒற்றை நீக்கிவிட்டால் சொல் தள்ளாடும்
முதல் எழுத்து வினைமுற்று
(மூன்றெழுத்துச்
சொல்லுக்கு நிறையவே குறிப்புகள் )
என்ன அந்தச் சொல்?
விடை
போந்தை
சரியான விடை எழுதிய ஒரே சகோ
வேலவனுக்கு வாழ்த்துகள்
பாராட்டுகள்
முயற்சித்த சகோ
சிராஜுதீனுக்கு நன்றி
விளக்கம்
போந்தை வேம்பே ஆர்என
வரூஉம்
மாபெருஞ் தானையர் மலைந்த
பூவும்
(புறத்திணை இயல். 5)
என்று தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது.
"போந்தை" என்பது பனம்
பூவைக் குறிக்கும். சேரனுக்குரிய அடையாளப் பூவான பனம்பூவைப் புகழ்வது.
இதே பெயரை கொண்டு
போந்தை ஊராட்சி (Bondai Gram
Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு வட்டாரத்தில்
அமைந்துள்ளது.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
க ங0ச உ0உரு
13042025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment