தமிழ் [மொழி]அறிவோம்
நான்கெழுத்து
முதல் எழுத்து இடையினம் அகர நெடில்
இரண்டும் நான்கும் மெல்லின ம்
மற்றது வல்லினம்
இலக்கியச் சொல்
பொருள் இறைவனின் தனமையை நினைவு படுத்தும்
என்ன அந்தச் சொல் ?
விடை
யாண்டும்
ஓரளவு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறும் ஒரே சகோ
சோமசேகர்
இவர் அனுப்பிய விடை
வானகம்
எழுத்துக்கள் பொருத்தமாக இருக்கின்றன
பொருள் ஓரளவு பொருந்துகிறது
விளக்கம்
ய வரிசையில் துவங்கும் சொற்கள் பேச்சு ,எழுத்து வழக்கில் அதிகமாக இல்லை
ஆனால்
குறள் 4: அதிகாரம் கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
என்ற குறள் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த ஒன்று
யாண்டும் பொருள் எங்கும், எவ்விடத்தும், எப்போதும், எக்காலத்திலும்
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௨௭ ௦௪ ௨௦௨௫
27 04 2025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment