உளறல் கிறுக்கல்
சுந்தரி சௌந்தரி நிர ந்தரியே
பாடல் நினைவிருக்கிறதா ?
என் பள்ளிக்கு முந்திய பருவத்தில் அடிக்கடி வானொலியில் ஒலித்த பாடல்
(ஷிர்க் என்று ஒதுக்காமல் அ த்தா நண்பர்களுடன் கேட்டு மகிழ்வது உண்டு )
இந்தப்பா டல் இடம் பெற்ற தூக்குத் தூக்கி படத் தில் காலத்தால் அழியாத வசனத் தொகுப்பு
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இவை எல்லாம் சரியா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கவில்லை
“கொலையும் செய்வாள் பத்தினி”
மேலோட்டமாகப் பார்த்தால் நடக்கக் கூடாத நடக்க முடியாத ஒன்று என்று நான் சிறு வயதில் நம்பியது
இன்று 100% அல்லது அதற்கு மேல் உண்மையென்று ஆனது ஒரு சமுதாய சீ ரழிவு, ஒழுக்கக்கேடு
இப்படிச் சொல்லக்கூட ஒரு தயக்கம்
காரணம் உச்ச நீதி மன்றம் இப்படி ஒரு கொ லையில் ,கொன்று உடலை எரித்ததை சாதாரணமான கொலைதான்
பயங்கர மான கொலை அல்ல என்று தீர்ப்பு அளித்துள் ளது
செய்திதாளை திறந்தால் குறைந்தது இரண்டு மூன்று பத்தினிககொலைகள் –
ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி
பெரும்பாலான கொலைகளுக்கு சொல்லப்படும் காரணம்
1 மது
2 வரம்பு மீறிய உறவுகள்
3 சொத்து
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த பத்தினிக் கொலை
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இருக்கிறது
கொலை செய்யப்பட்டவர் யாரோ எவரோ இல்லை
முன்னாள் மாநில காவல் துறை தலைவர் (DGP)
கொலையோ மிகக் கொடூரக்கொலை
கண்ணில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி
அதற்கு மேல் மிள காயப் பொடி தூவி
முகத் தை போர்வையால் மூடி
சரமாரி யாகாக கத்தியால் குத்தி
குருதி வெள்ளத்தில் துடிக்க வைததார் பத்தினி
அவர் மகளும் இதற்கு உடந்தையோ என்ற ஐயம் இருக்கிறது
அந்தப் பத்தினிப் பெண்ணை தீவிர வாதிகளுக்கு
“ கனவிலும் நினைக்காத கடும் தண்டனை “
வழங்கும் துறையில் சேர்த்துக் கொள்ளலாம்
======
இவ்வளவு நாள் தண்டனை வழங்குவது நீதி மன்றம் என்று எண்ணியிருந்தேன்
சில முக்கிய வழக்குகளில் அரசின் தலையீடு இருக்கும் என்று சொல்வார்கள்
இப்போது தெளிவாகி விட்டது
மிக முக்கிய வழக்குகளில் தண்டனையை நிர்ணயிப்பது அரசுதான் என்று
=========
நாற்பது ஆண்டுகள் முன்பு ஜம்முவில் வங்கி கிளை ஆய்வுப்பணிக்காக ஒரு மாததுக்கு மேலாக தங்கியிருந்தேன்
ஜம்மு காஷ்மீர் என்று நாம் பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிட்டாலும் இரண்டும் முற்றிலும் வேறானவை
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் தொலைவு 260 முதல் 340 கிலோமீட்டர் வரை. பயண நேரம் 7-10 மணி நேரம் வரை மாறுபடும்.
பருவ நிலைல நம்மூர் போல இருக்கும் ஜம்முவில் அதனாலதான்
மாநிலத்தின் குளிர் காலத் தலைநகராக பிரித்தானியர்கள் ஏற்படுதியாது
ஜம்மு& காஷ்மீர் ஒரே மாநிலமாக இருக்கும் வரை தொடர்ந்தது
ஜம்மு பெரும்பாலும் அமைதியான பகுதி
நான் அங்கு இருந்த காலத்தில் போர் சூழநிலை எதுவும் இல்லை
இருந்தாலும் ராணுவ ஊர்திகள் வலம் வந்து கொண்டே இருக்கும்
செடி கொடி மறைவில் பல வண்டிகள் ஆயத்த நிலையில் இருக்கும்
காரணம் மிக அருகில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு இருக்கிறதாம்
இந்தக் காரணத்தால்தான் ஜம்முவில் வங்கியின் currency chest வைக்க அனுமதி கிடைக்கவில்லை
(இந்தியாவில் கிடைக்காத பல மருந்துகள் பாகிஸ்தானில் கிடைக்குமாம்
ஓடிப்போய் எல்லையை கடந்து பாகிஸ்தான் போய் மருந்து வாங்கி வரும் ஆள்கள் இருக்கிறார்கள்
அவ்வளவு பக்கம் )
-=========
பல ஆண்டுகள் முன்பு தம்பி சகா குடும்பம் இரண்டாம் முறை புனிகப் பயணம் சென்றபோது நான்
“அடுத்து வரும் ஆண்டுகளில் நம் நாட்டில் இருந்து புனிதபயணம் இருக்குமா தெரியவில்லை “
என்று யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தேன்
சென்ற ஆண்டு அரசு மூலம் சென்றவர்கள் மிகப் பெரும் சிரமங்களை சந்தித்தார்கள்
இந்த ஆண்டு தனியார் மூலம் பெரும் பணம் ( 7 முதல் 10ககு மேல் லட்சங்கள் ) கட்டிய
52 ஆயிரம் பேர்
தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்
பயணம போவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை
பணமாவது திரும்ப வருமா தெரியவில்லை
இது பற்றிப்பேசி தீ ரவு காண மஸ்தான் போயிருந்தார்
நம் நாட்டில் தென்னை மரத்தில் தேள் கொட்டிய செய்தி கேட்டுத் துடித்துப்போய் துரித கதியில் திரும்பிய அவர் பனை மரத்துக்கு மந்திரிக்கப் போய் விட்டார்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்ன இப்படி தொடர்பில்லாத பல செய்திகள் ஒரே பதிவில் என்று கேட்கிறீர்களா !!
அதுதான் உளறல்
அதுதான் கிறுக்கல்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
30042025 புதன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment