Thursday, 24 April 2025

திரு மறை குரான் 41 20 -22 25 04 2025 வெள்ளி


 திரு மறை குரான்

41 20 -22 

25 04 2025 வெள்ளி  

தவறுகளுக்கு உங்கள் காதுகளும் கண்களும் தோலும் சான்று பகரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா ?

என்ற கருதுடைய   குரான் வசனம் எது ? 

விடை :

41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

Play Copy WordByWord தஃப்சீர் 41:21

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.

41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் 

சகோ

ரவி ராஜ் 

 – முதல் சரியான விடை

 சிறப்புப் பாராட்டுக்கள் வாழத்துக்கள் 

சிராஜுதீன் 

 ஷர் ம தா&

ஷி ரீன் பா ரூக் 

விளக்கம் 

அடுத்து வரும் வசனங்கள் 41: 22  -  23 

41: 20 க்கு  விளக்கமாக அமைகின்றன  

இறைவன் நாடினால் நாளைதமிழில் சிந்திப்போம் 

26  ஷவவால்  (10) 1446 

25  04 2025 வெள்ளி 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment