Saturday, 31 May 2025

துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 5 சபா மர்வா – ஜம் ஜம் கிணறு 0 106 2025 ஞாயிறூ

 




துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 5

சபா மர்வா –

ஜம் ஜம் கிணறு

0 106 2025  ஞாயிறூ  

 

 

 நேற்றைய வினா – மிக எளிய வினா

சபா மர்வா தொங்கோட்டம் –

இதற்கான அடிப்படை நிகழ்வு எது ?

 

விடை விளக்கம்

நபி இப்ராகிம்இறைவன் கட்டளைப்படி தன் மனைவி ஹாஜரையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் பாலை வனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறார் . அவர் கொடுத்து விட்டுப்போன உணவும் நீரும் தீர்ந்து விட குழந்தையின் தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தேடி ஹாஜர் அங்கும் இங்கும் அலைகிறார் .

ஒரு பக்கம் ஸபா இன்னொரு பக்கம் மர்வா என சிறு குன்றுகள் . ஒரு குன்றின் உச்சியில் ஏறி தண்ணீர் எங்காவது இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஒன்றும் கிடைக்காத்தால் மறு குன்றின் உச்சியில் எறிப்பார்க்கிறார்.

இப்படி எழு முறை இரு குன்றுகளுக்கும் இடையே ஓடுகிறார் . இதற்கிடையே மகன் பாதுகாப்பாக இருக்கிறாரர என்பதையும் பார்த்துக்கொள்கிறார் .

மகன் கண்ணில் படும்போது சற்று நிதானமாகவும்

கண்ணில் படாத இடங்களில் வேகமாகவும் ஓடுகிறார்

இதற்கிடையே இறைவன் கட்டளைப்படி இறைத் தூதர் ஜிப்ரில் அலை அவர்கள் குழந்தைக்கு அருகே ஒரு நீரூற்றை உண்டாக்க அதிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை பெருக்கெடுக்காமல் நிற்கும்படி அன்னை ஹாஜர் ஜம் ஜம் என்று சொல்ல அதுவே அந்த நீருற்றுக்குப் பெயராகி விட்டது

அன்று துவங்கி இன்று வரை, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக் தண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது . காபாவுக்கு வரும் லட்சக்கணக்கானோர் பயன் படுத்தும் அளவுக்கு வந்து கொண்டே இருக்கிறது மேலும் அந்தப்பகுதியில் பல கி மீ தொலைவுக்கு எந்த நீர் ஆதாரமும் கிடையாது

பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த நீருற்று யாரும் போக முடியாத அளவுக்கு மூடப்பட்டு தண்ணீர் மட்டும் இறைத்து விநியோகிக்கப்படுகிறது

ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரின் தரம், தூய்மை மிக நவீன முறைகளில் பரிசோதிக்கப்படுகிறது . மிக அதிகம் கூட்டம் கூடும் புனித ரமலான் மாதத்தில் ஒரு நாளைக்கு நூறு முறை பரிசோதிக்கப்படுகிறது .

ஜம் ஜம் நீர் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ எங்கும் விலைக்கு விற்கப்படுவதில்லை

நிறம், மனமற்ற இந்த நீர், பல ஆண்டுகளாக அப்படியே கெட்டுப்போகாமல் இருக்கும்

அன்னை ஹாஜர் ஸபா மர்வாகுன்றுகளுக்கு இடையே ஓடியதை நினைவு கொள்ளும் வகையில் இன்றும் ஹஜ் பயணிகள் ஸபா , மர்வாவுக்கு இடையே எழு முறை ஓட வேண்டும் .

அன்று அன்னை ஹாஜர் ஓடியது கடும் வெய்யிலில் கொதிக்கும் பாலை வன மணலில்

இன்றோ வழுவழு தரை , குளிர்பதன வசதி , அன்னை ஹாஜர் போல் வேகமாக மெதுவாக ஓட வேண்டிய இடங்களைக் குறிக்கும் வண்ண விளக்குகள் .ஆங்காங்கே உட்கார்ந்து ஒய்வு எடுக்க இடங்கள்,

நடக்க முடியாதவட்களுக்கு சக்கர நாற்காலிகள் , இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் ) என பல வசதிகள்

ஒரு முறைக்கு அரை கி மீ யாக மொத்தம் மூன்றரை கி மீ வரும்

ஸபா மலைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு

அண்ணல் நபி ஸல் அவர்கள் முதன் முதலில் இசுலாம் பற்றி பரப்புரை செய்தது இந்த மலை மேலிருந்துதான் . எவ்வளவு எதிர்ப்பு , எத்தனை வசை மொழிகள் ! அது ஒரு தனிக்கதை

அதற்கு நேர் மாறாக அண்ணல் நபி ஸல் அவர்கள் வெற்றி வீரராக மக்காவில் நுழைந்து மக்களிடம் உரையாற்றியதும் இதே மலை மேலிருந்துதான் . எதிர்த்தவர்கள் , வசை பாடியவர்கள் எல்லோரும் மிகுந்த பணிவுடன் , ஒரு வகை அச்சத்துடன் அவர் உரையைக் கேட்டனர்

 

நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் இறைவனின் அடையாளங்கள் . புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் இவற்றிற்கு இடையே ஓடுவது தவறு கிடையாது ---------“(குரான் 2:158)

இரண்டு குன்றுகளுக்கு இடையே ஓடுவது தவறு , பாவம் என்றொரு கருத்து உலவ ஆரம்பித்த காலத்தில் அதைத் தெளிவு படுத்தவே “ தவறு இல்லை , பாவம் இல்லை “ போன்ற சொற்கள் . மற்றபடி ஸயி எனப்படும் இந்த ஓட்டம் புனிதப் பயணத்தில் கட்டாயக் கடமையாகும்

 

 

 

சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்

சகோ

– சி ராஜூதீன்    முதல் சரியான விடை

&

ஷ ர்மதா

 

 

 

 

இன்றைய வினா

  புனிதப் பயணம் முழுமையாக நிறைவேற மதீனாவில் எத்தனை நாள்  தங்க வேண்டும் ?

 

 

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம் 

 

நம்மில் உடல் நலம் , பணநலத்தில்  தகுதி உள்ள அனைவரும்  புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்

 

ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்

இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?

இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து  மனம் உவந்து செயல்படுவோம்

 

Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்   

 

 

4    துல் ஹஜ் (12)  1446

0 1   0 6 2025 ஞாயிறூ

சர்புதீன் பீ

Friday, 30 May 2025

துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 4 31 052025 சனிக்கிழமை





 துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 4

31 052025 சனிக்கிழமை
நேற்றைய வினா – மிக எளிய வினா
மிகப்பல சிறப்புகள் அருளப்பெற்ற நபி இப்ராஹீம் அலைக்கு இன்னொரு சிறப்பாக அவர் பெயரும் புகழும் நாள்தோறும் பல முறை நினைவு கொள்ளப்படுகிறது
அது எபபடி ?
விடை
தொழுகையில் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவு:
தினமும் ஐந்து வேளை தொழுகையில் . ஒவ்வொரு தொழுகையிலும், கடைசி இருப்பின் போது (அத்தஹியாத்) "தரூத்" அல்லது "ஸலவாத் இப்ராஹீமியா" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பிரார்த்தனை ஓதப்படுகிறது. அதன் ஒரு பகுதி இங்கே:
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்."
இதன் பொருள் சுருக்கமாக: "யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தினர் மீதும் அருளைப் பொழிந்ததைப் போன்று, முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் அருளைப் பொழிவாயாக. நிச்சயமாக நீயே புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன். யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்ததைப் போன்று, முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் செய்வாயாக. நிச்சயமாக நீயே புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்."
இந்த பிரார்த்தனையின் மூலம், ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் குறைந்தது ஐந்து முறையாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரையும், அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூறுகிறார்கள்.
நபி முகமது ஸல் அவர்களுக்கும் , அவர்கள் குடும்பத்தினருக்கும் நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு வழங்கியாயதைப்போல் அருள் புரிவாயாக
என்று சொல்வதில் நபி இப்ராஹீம் அலை அவர்களின் சிறப்பும் உயர்வும் தெளிவாகிறது
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ ர்மதா – முதல் சரியான விடை
சி ராஜூதீன் ---விரிவான விளக்கமான விடைக்கு நன்றி
இன்றைய வினா
மீண்டும் ஒரு எளிய வினா
சபா மர்வா தொங்கோட்டம் –
இதற்கான அடிப்படை நிகழ்வு எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
3 துல் ஹஜ் (12) 1446
31 0 52025 சனிக்கிழமை
சர்புதீன் பீ

Thursday, 29 May 2025

துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 3 30052025 வெள்ளி



 


துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 3

30052025 வெள்ளி
நேற்றைய வினா – மிக எளிய வினா
நபி இப்ராஹீம் அலை குடும்பத்தில் யார் யாருக்கு இறைவன் நபித்துவத்தை அருளி சிறப்பிடிகிருக்கரன் ?
விடை
நபி இப்ராஹீம் (அலை):
இவரே இந்த குடும்பத்தின் தந்தை, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெரும் நபி.
நபி இஸ்மாயீல் (அலை): இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த மகன்.
நபி இஸ்ஹாக் (அலை): இப்ராஹீம் (அலை) அவர்களின் மற்றொரு மகன்.
நபி யஃகூப் (அலை): இவர் நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன். (இஸ்ரேல் என்றும் அழைக்கப்படுவார், இவரின் பரம்பரையில் இஸ்ரவேலர்கள் தோன்றினர்).
நபி யூசுஃப் (அலை): இவர் நபி யஃகூப் (அலை) அவர்களின் மகன்.
இப்படி தொடந்து 4 நேரடி வாரிசுகளை நபிகளாக்கி சிறப்பிடிகதிருக்கிறான் இறைவன்
இதுபோக
இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த மகன். நபி இஸ்மாயீல் (அலை): இவர்களின் பரம்பரையில் தான் நிறைவு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வந்தார்கள்
இப்ராஹீம் (அலை) அவர்களின் மற்றொரு மகன். நபி இஸ்ஹாக் (அலை): இவர்களின் பரம்பரையில்
தாவூத் (அலை), சுலைமான் (அலை), அய்யூப் (அலை),
மூசா (அலை), ஹாரூன் (அலை), ஸகரிய்யா (அலை),
யஹ்யா (அலை), ஈசா (அலை) போன்ற ஏராளமான நபிமார்கள் தோன்றினர்.
நபி லூத் (அலை): இவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரரின் மகன் (மருமகன்).
இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் "நபிமார்களின் தந்தை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, ஏராளமான இறைத்தூதர்களை உலகிற்கு தந்த ஒரு அருள் மிக்க குடும்பம் ஆகும்.
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ ர்மதா – முதல் சரியான விடை
சி ராஜூதீன் ---விரிவான விளக்கமான விடைக்கு நன்றி
என் வேலை எலிதாகி விட்டது
இன்றைய வினா மீண்டும் ஒரு எளிய வினா
மிகப்பல சிறப்புகள் அருளப்பெற்ற நபி இப்ராஹீம் அலைக்கு இன்னொரு சிறப்பாக அவர் பெயரும் புகழும் நாள்தோறும் பல முறை நினைவு கொள்ளப்படுகிறது
அது எபபடி ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்

 
02 துல் ஹஜ் (12) 1446
30 0 52025 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday, 28 May 2025

துல்ஹஜ் மாத சிறப்புப் பதிவு 2 29052025 வியாழன்

 




துல்ஹஜ் மாத சிறப்புப் பதிவு 2

29052025 வியாழன்
இறைவம் அருளால் நேற்று மாலை பிறை தெரிந்து
புனித துல்ஹஜ் மாதம் துவங்கி விட்டது
நேற்றைய வினா – மிக எளிய வினா
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு பற்றி சொல்லும்
திருமறை வசனம்/வசனங்கள் எவை ?
விடை
ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்கள் ,
அவற்றில் தலையாயது
சூ ரா 89 அல்பஜ் ரி (விடியல் காலை) வசனம் 2
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
Play Copy WordByWord தஃப்சீர் 89:2
89:2 وَلَيَالٍ عَشْرٍۙ‏
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
அல்-ஃபஜ்ர் என்பது காலை நேரம் என்பது நன்கு அறியப்பட்டதாகும். இதை அலீ (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), இக்ரிமா (ரழி), முஜாஹித் (ரழி) மற்றும் அஸ்-சுத்தீ (ரழி) ஆகியோர் கூறியுள்ளனர். மஸ்ரூக் (ரழி) மற்றும் முஹம்மத் பின் கஅப் (ரழி) ஆகியோரிடமிருந்து அல்-ஃபஜ்ர் என்பது குறிப்பாக குர்பானி நாளைக் குறிக்கிறது என்றும், அது பத்து இரவுகளில் கடைசியானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "பத்து இரவுகள்" என்பது துல்-ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களைக் குறிக்கிறது. இதை இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு ஸுபைர் (ரழி), முஜாஹித் (ரழி) மற்றும் முன்னோர்கள் மற்றும் பிந்தைய தலைமுறையினரில் பலரும் கூறியுள்ளனர். ஸஹீஹ் அல்-புகாரியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது:
இன்னும் ஒன்று
அல்-ஹஜ் (22) அத்தியாயத்தின் 28 ஆம் வசனம்:
"...அவர்கள் தங்களுக்குரிய (இம்மை, மறுமையின்) பலன்களை அடைவதற்காகவும், அல்லாஹ்வுடைய பெயரை – அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிடப்பட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்)."
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் "குறிப்பிடப்பட்ட நாட்கள்" (அய்யாமுன் மஃலூமாத்) என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைக் குறிப்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) போன்ற சஹாபாக்கள் விளக்கியுள்ளனர்.
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ ர்மதா – முதல் சரியான விடை
சி ராஜூதீன்
மெ ஹ ராஜ்
பங்கேற்ற சகோ ஷிரீன் பாருக்குக்கு நன்றி
விளக்கம்
இந்த பத்து நாட்களில் செய்யும் இறை வணக்கங்கள், நோன்பு , தானா தருமங்கள் எல்லாவற்றிற்கும் மற்ற நாட்களை விட பன்மடங்கு பலன் இருப்பதாகச் சொல்கிறார்கள்
மேலும் இந்தப் பத்து நாட்களில் தொழுகை, விருப்ப நபீல் நோன்பு, ஜக்காத் ,ஹஜ் என எல்லா அமல்களையும் பன்மடங்கு நன்மையுடன் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது
இறைவன் அருளால் இந்த வாய்ப்புகளை முடிந்த வரை பயன்படுத்திக்கொண்டு இறையருளை நிறைவாகப் பெற முயற்சிப்போம்
இன்றைய வினா
ஹஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது நபி இப்ராஹீம் அலை அவர்கள்தான்
அந்த மாமனிதரின் குண நலன்கள் , அவர்களுக்கு இறைவன் அள்ளிக்கொடுத்திருக்கும் அருட்கொ டைகள் பலமுறை விரிவாக எழுதியிருக்கிறேன்
இறை அருளால் வாய்ப்புக் கிடைததால் இந்த முறையும் எழுதுவேன்
எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத வரலாறு
நபி இப்ராஹீம் அலை குடும்பத்தில் யார் யாருக்கு இறைவன் நபித்துவத்தை அருளி சிறப்பிடிகிருக்கரன் ?
இதுதான் இன்றைய வினா மீண்டும் ஒரு எளிய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
(சொல் சொல - நேற் றை ய பதிவில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய சகோ ராஜாத்திக்கு நன்றி
01 துல் ஹஜ் (12) 1446
29 0 52025 வியாழன்
சரபுதீன் பீ

Tuesday, 27 May 2025

துல்ஹஜ் மாத சிறப்புப் பதிவு 1 28052025 புதன்




 துல்ஹஜ் மாத சிறப்புப் பதிவு 1

28052025 புதன்
இறைவன் அருளால் இன்றிரவு பிறை தெரிந்தால்
ஹிஜ்ரி ஆண்டை நிறைவு செய்யும் 12 ஆவது மாதமான துல்ஹஜ் மாதம் துவங்குகிறது
இந்த மாததின் சிறப்பு பற்றி நான் அறிந்தவற்றை உங்களுடன் வினா விடை வடிவில் வரும் 10 நாட்களில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்
இறைவன் அருள வேண்டும்
குர்பானி கொடுக்க எண்ணம் உள்ளவர்கள் பிறை பார்த் த தில் இருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம் ,முடி களையாமல் இருப்பது ஒரு சிறப்பான நபி வழி ஒழுங்கு
புனித நோன்பு (ரமளான்) மாதத்தின் நிறைவு பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை – அந்த நாட்களில்தான் ஆயிரம் மாதங்களுக்கு மேலான மகத்துவம் உடைய லைலத்துல் கத் ர் இரவு வருகிறது
அந்த அளவுக்கு துளஹஜ்ஜின் முதல் பத்து நாட்களும் சிறப்பானவை என்பது அறிஞர்கள் கருத்து
அவற்றை எல்லாம் ஒன்றான பின் ஒன்றாக வரும் நாட்களில் பார்ப்போம்
துவக்கமாக இன்றைய வினா – மிக எளிய வினா
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு பற்றி சொல்லும்
திருமறை வசனம்/வசனங்கள் எவை ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொலபிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
29 துலகதா 911( 1446
28052025 புதன்
சரபுதீன் பீ

Monday, 26 May 2025

English QUIZ Lists off 27 05 2025 Tue

 






English QUIZ

Lists off

27 05 2025 Tue

News heading in the Hindu dated 250525 Sunday

Cargo vessel lists off Kochi coast; 21 rescued

 

I cannot understand the meaning of

“lists off “ in this context

Please let me know if you understand

 

Ans

 "Listing" is a nautical term to describe when a vessel takes on water and tilts to one side. A ship can list either to port (left) or starboard (right).

 

Greetings and Congratulations to those who  sent correct answers:

M/S

Ashraf Hameeda

First correct answer

&

Sirajuddin

 

Thanks to M/s AR Viswanathan and Sivasubramanian  for participating

Let us meet tomorrow by HIS Grace

 

27052025 Tue

SherfuddinP