துல்ஹஜ் மாத சிறப்புப் பதிவு 2
29052025 வியாழன்
நேற்றைய வினா – மிக எளிய வினா
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு பற்றி சொல்லும்
திருமறை வசனம்/வசனங்கள் எவை ?
விடை
ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்கள் ,
அவற்றில் தலையாயது
சூ ரா 89 அல்பஜ் ரி (விடியல் காலை) வசனம் 2
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
Play Copy WordByWord தஃப்சீர் 89:2
89:2 وَلَيَالٍ عَشْرٍۙ
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
அல்-ஃபஜ்ர் என்பது காலை நேரம் என்பது நன்கு அறியப்பட்டதாகும். இதை அலீ (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), இக்ரிமா (ரழி), முஜாஹித் (ரழி) மற்றும் அஸ்-சுத்தீ (ரழி) ஆகியோர் கூறியுள்ளனர். மஸ்ரூக் (ரழி) மற்றும் முஹம்மத் பின் கஅப் (ரழி) ஆகியோரிடமிருந்து அல்-ஃபஜ்ர் என்பது குறிப்பாக குர்பானி நாளைக் குறிக்கிறது என்றும், அது பத்து இரவுகளில் கடைசியானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "பத்து இரவுகள்" என்பது துல்-ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களைக் குறிக்கிறது. இதை இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு ஸுபைர் (ரழி), முஜாஹித் (ரழி) மற்றும் முன்னோர்கள் மற்றும் பிந்தைய தலைமுறையினரில் பலரும் கூறியுள்ளனர். ஸஹீஹ் அல்-புகாரியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது:
இன்னும் ஒன்று
அல்-ஹஜ் (22) அத்தியாயத்தின் 28 ஆம் வசனம்:
"...அவர்கள் தங்களுக்குரிய (இம்மை, மறுமையின்) பலன்களை அடைவதற்காகவும், அல்லாஹ்வுடைய பெயரை – அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிடப்பட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்)."
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் "குறிப்பிடப்பட்ட நாட்கள்" (அய்யாமுன் மஃலூமாத்) என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைக் குறிப்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) போன்ற சஹாபாக்கள் விளக்கியுள்ளனர்.
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ ர்மதா – முதல் சரியான விடை
சி ராஜூதீன்
மெ ஹ ராஜ்
பங்கேற்ற சகோ ஷிரீன் பாருக்குக்கு நன்றி
விளக்கம்
இந்த பத்து நாட்களில் செய்யும் இறை வணக்கங்கள், நோன்பு , தானா தருமங்கள் எல்லாவற்றிற்கும் மற்ற நாட்களை விட பன்மடங்கு பலன் இருப்பதாகச் சொல்கிறார்கள்
மேலும் இந்தப் பத்து நாட்களில் தொழுகை, விருப்ப நபீல் நோன்பு, ஜக்காத் ,ஹஜ் என எல்லா அமல்களையும் பன்மடங்கு நன்மையுடன் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது
இறைவன் அருளால் இந்த வாய்ப்புகளை முடிந்த வரை பயன்படுத்திக்கொண்டு இறையருளை நிறைவாகப் பெற முயற்சிப்போம்
இன்றைய வினா
ஹஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது நபி இப்ராஹீம் அலை அவர்கள்தான்
அந்த மாமனிதரின் குண நலன்கள் , அவர்களுக்கு இறைவன் அள்ளிக்கொடுத்திருக்கும் அருட்கொ டைகள் பலமுறை விரிவாக எழுதியிருக்கிறேன்
இறை அருளால் வாய்ப்புக் கிடைததால் இந்த முறையும் எழுதுவேன்
எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத வரலாறு
நபி இப்ராஹீம் அலை குடும்பத்தில் யார் யாருக்கு இறைவன் நபித்துவத்தை அருளி சிறப்பிடிகிருக்கரன் ?
இதுதான் இன்றைய வினா மீண்டும் ஒரு எளிய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
(சொல் சொல - நேற் றை ய பதிவில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய சகோ ராஜாத்திக்கு நன்றி
01 துல் ஹஜ் (12) 1446
29 0 52025 வியாழன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment