Sunday, 25 May 2025

ஆணையும் அதிகாரமும் 22012025 புதன்

 






ஆணையும் அதிகாரமும்

22012025 புதன்

பொதுவாக ஆணையர் என்பது ஒரு அதிகார மையத்தைக் குறிக்கும்

காவல் துறை ஆணையர்

வருமான வரி ஆணையர

நகராட்சி ஆணையர் என பல பதவிகள் இதற்கு எடுத்துக்காட்டு

நகராட்சி ஆணையராக கோலோச்சிய எங்கள் அத்தா பற்றி விரிவாக முன்பு எழுதியிருக்கிறேன்

அதன் தொடர்ச்சியாக இன்னும் சில வரிகள

Power vests with those who exercise it

அதிகாரம் செலுத்துபவரி டத்தில்தான் அதிகாரம் குவிகிறது

இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு வங்கி கிளை மேலாளர்களுக்கு உள்ள கடன் வழங்கும் அதிகாரம்

நான் பணியாற்றிய காலத்தில்

விதிகளுக்கு உட்பட்டு ஒருவருக்கு 35 லட்சம் வரை கடன் வழங்க கிளை மேலாளர்களுக்கு அதிகாரம் உண்டு

ஒரு சிலரே அதை முழுமையாக பயன்படுத்துவார்கள்

விதிகளை நன்றாகப் புரிந்து கொண்டால்தான் முழு அதிகாரம் செலுத்த முடியும்

அந்த வகையில் அத்தாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்

இன்றைய pocso சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை

அன்றே ஒரு பள்ளி ஆசிரியர் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் புரிந்து வந்தார்

எப்படியோ சட்டத்தின் பிடியிலிருந்தும் தண்பனையிலிருந்தும் தப்பித்து வந்தார்

அத்தா முறைப்படி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து அவரை பணி நீக்கம் செய்தார்கள்

ஒருமுறை விடுதலை நாள் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பெண்கள் பள்ளியில் ஒரு குழுவுக்கு பயிற்சி கொடுத்து வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள்

பள்ளியை விட்டு லெளியே மாணவிகளை அழைத்துச் செல்ல முறையான அனுமதி பெறவில்லை என்ற காரணத்தால் அந்தக் குழுவினர் திரும்பிச் செல்ல ஆணை இடப்பட்டது

பல நாட்கள் பயிற்சி செய்த மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் மிகுந்த மன வருத்தம்

மாணவிகள் குழுவில்.எங்கள் உடன் பிறப்பும் ஒருவர்

அதற்காக எந்த சலுகையும் இல்லை

ஒரு ஊரில் உள்ள நகராட்சி பள்ளிகள் அனைத்தும் மிக சிறப்பாக செயல்பட்டு ஒழுக்கத்திலும் படிப்பிலும் பெயர் பெற்று விளங்கின

பள்ளி நிறைவுத் தேர்வில் (11 ஆம் வகுப்பு) வெற்றி பெரும் மாணவ மாணவியருக்கு அவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு புகுமுக வகுப்பில் என்ன பாடம் படிக்கலாம் என்பது குறித்து ஒரு பரிந்துரை பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்தது

இதில் ஒரு சில பிரச்சினைகள் வந்நபோது பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆணையரை அணுக

இது தேவையில்லாத பழக்கம் என்று நிறுத்தப்பட்டது

இப்படி சின்ன சின்ன பிரச்சினைகளில் கூட மனதை செலுத்தி செயல்பட்டது அத்தாவின் சிறப்பு

பெரிய அளவில் பணம் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்து

விதிகளின் படி காப்பீடு செய்ய வேண்டும்

அதற்கு செலவு அதிகம் ஆகும் என தயங்கினார்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள்

இதில் தயக்கத்திற்கு இடமே இல்லை

உடனே காப்பீடு செய்து விடுங்கள் என ஆணை பிறப்பிக்கப்பட்டது

பன்றிகள் தெருவில் திரிந்தால் காலக்கெடு குறித்து அறிவிப்பு வெளியிட்டு அந்தக் கெடுவுக்குப் பின் திரிபவவை சுட்டுக் கொல்லப்படும்

கொசுறாக ஒன்று

தம்பி ஷகா துவக்கப் பள்ளியில்

ஒருநாள் மதிய உணவுக்கு

ஷகா வீட்டுக்கு வந்தபோது

அத்தா அவரிடம்

"எத்தனாவது படிக்கிற"

என்று கேட்க

"ரெண்டாவது"

என்று ஷகா சொல்ல

"ரெண்டாவதா

மூனாவது என்று நினைத்தேன்"

இது அத்தா

அவ்வளவுதான்

அதற்கு மேல் எதுவும் பேசவுமில்லை செய்யவுமில்லை

அத்தா இப்படிக் கேட்டதை எப்படியோ துணிச்சலாக வகுப்பாசிரியரிடம் ஷகா சொல்ல அவர் உடனே இதை தலைமை ஆசிரியருக்கு கொண்டு

சேர்த்தார்

தலைமை ஆசிரியர் இரண்டாம் வகுப்புக்கு வந்து ஷகாவைக் கூட்டிக் கொண்டு போய் மூன்றாம் வகுப்பில் உட்கார வைத்து விட்டார்

எனக்கும் இது போல் இரட்டை வகுப்புயர்வு இருமுறை கிடைத்தது

அதன் விளைவாக

18 வயதில் பட்டம்

19 வயதில் வங்கியில் சேர்ந்து

40+ ஆண்டுகள் பணி

22 வயதில் திருமணம்

23 ல் முதல் குழந்தை

48 இல் முதல் பேரக்குழந்தை

ஒரு சிறிய வருத்தம் 15 3/4 வயது நிறைவடையாததால் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியவில்லை

அதனால் பெரிய குறை ஒன்றும் இல்லை

இருந்தாலும் ---------

இறைவன் நாடினால் நாலை குரானில் சிந்திப்போம்

21052025 புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment