திரு மறை குரான்
07:31
0905 2025 வெள்ளி
உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள்;
உண்ணுங்கள், பருகுங்கள
என்ற கருத்துடைய குரான் வசனம் எது ?
சுரா 7 அல் அராப் சிகரங்கள்
வசனம் 31
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு
மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்,
பருகுங்கள்;
எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு
கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர்
சகோ
ரவி ராஜ்
– முதல் சரியான விடை
சிறப்புப் பாராட்டுக்கள் வாழ் த்துக்கள்
தொடர்ந்து மூன்றாவது வாரமாக முதல் சரியான விடை அனுப்பி hat trick அடித்ததற்கு
மீண்டும் ஒரு சிறப்புப் பாராட்டு
(10 பெருக்ககு மேல் விலை இல்லா குரான் அனுப்ப ஏற்பாடு செய்தேன்
அதில் இந்த அளவுக்கு ஈடுபாட்டோடு விடை
அனுப்புவது இவர் ஒருவரே
இவரின் நலனுக்காக இறைவனை வேண்டுவோம்
)
ஷர் ம தா&
சீராஜூதீன்
விளக்கம்
ஆடை இன்றி காபாவை வலம் வரும் மூடப் பழக்கத்தை மாற்ற
இந்த வசனம் அருளப்பட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது
மேலும் ஒரு பெரிய மனிதரையோ உயர் அதிகாரியையோ சந்திக்கப்போவதென்றால்
அதிக
பகட்டில்லாத தூய ஆடைகளை அணிந்து செல்வது உலக வழக்கம்
அகில உலகங்களையும் உயிரினங்களையும் படைத்து காத்து ஆட்சி செய்யும் ஏக இறைவனின் இல்லத்துக்குப் போகும்போது
அதற் கேற்ற ஆடைகளை அணிந்து தலையை மறைத்துத்தான்
போக வேண்டும்
இஸ்லாமியத் தொழுகை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே
உள்ள நேரடி உரையாடல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
வீண் விரையம், வீண் ஆடம்பரம் இறைவன் விரும்பாத ஒன்று
இறைவன்
நாடினால் நாளைதமிழில் சிந்திப்போம்
10 துல்கq தா (11 ) 03
09 05 2025
வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment