Friday, 30 May 2025

துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 4 31 052025 சனிக்கிழமை





 துலஹஜ் மாத சிறப்புப் பதிவு 4

31 052025 சனிக்கிழமை
நேற்றைய வினா – மிக எளிய வினா
மிகப்பல சிறப்புகள் அருளப்பெற்ற நபி இப்ராஹீம் அலைக்கு இன்னொரு சிறப்பாக அவர் பெயரும் புகழும் நாள்தோறும் பல முறை நினைவு கொள்ளப்படுகிறது
அது எபபடி ?
விடை
தொழுகையில் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவு:
தினமும் ஐந்து வேளை தொழுகையில் . ஒவ்வொரு தொழுகையிலும், கடைசி இருப்பின் போது (அத்தஹியாத்) "தரூத்" அல்லது "ஸலவாத் இப்ராஹீமியா" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பிரார்த்தனை ஓதப்படுகிறது. அதன் ஒரு பகுதி இங்கே:
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்."
இதன் பொருள் சுருக்கமாக: "யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தினர் மீதும் அருளைப் பொழிந்ததைப் போன்று, முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் அருளைப் பொழிவாயாக. நிச்சயமாக நீயே புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன். யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்ததைப் போன்று, முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் செய்வாயாக. நிச்சயமாக நீயே புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்."
இந்த பிரார்த்தனையின் மூலம், ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் குறைந்தது ஐந்து முறையாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரையும், அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூறுகிறார்கள்.
நபி முகமது ஸல் அவர்களுக்கும் , அவர்கள் குடும்பத்தினருக்கும் நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு வழங்கியாயதைப்போல் அருள் புரிவாயாக
என்று சொல்வதில் நபி இப்ராஹீம் அலை அவர்களின் சிறப்பும் உயர்வும் தெளிவாகிறது
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ ர்மதா – முதல் சரியான விடை
சி ராஜூதீன் ---விரிவான விளக்கமான விடைக்கு நன்றி
இன்றைய வினா
மீண்டும் ஒரு எளிய வினா
சபா மர்வா தொங்கோட்டம் –
இதற்கான அடிப்படை நிகழ்வு எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவரும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஓபபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம் உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
3 துல் ஹஜ் (12) 1446
31 0 52025 சனிக்கிழமை
சர்புதீன் பீ

No comments:

Post a Comment