Thursday, 1 May 2025

இறைவனின் score board ஏப்ரல் 2025 01052025

 இறைவனின் score board ஏப்ரல் 2025 

(vasi 1 only)

மூன்று மறைவுகள் 

6 ஆம் தேதி மும்தாஜ் அக்கா 

 எங்கள்ஹாஜி பீர்  குடும்பத்தில் முதல் மறைவு 

ஓரளவு எதிர்பார் க்கபட்டது

 வாழ்நாளில் பெரும் பகுதியை தொழுகை ,நோன்பு குரான் ஓதுதல் என் று  பயனுள்ளதாக்கிக் கொண்டவர் 

பொய்  புறம் பேசுதல் அவர் அறியாதவை 

அதை எல்லாம் மிஞ்சி நிற்பது அவருடை ய மனித நேயம் 

 நோய் , துன்பம் ,துயரம் எங்கிருந்தாலும் ஆறுதல் சொல்லப் பறந்து விடுவார் 

அவர் இருக்கும் இடத்தில்  தென்றல் வீசியது போல ஒரு அமைதி ஏற்பட்டது துன்பத்தின் தாக்கம் மட்டுப் படும் 

அந்தத் தென்றல் காற்று சுவனத்தில் தேவைப்பட்டு இறைவன் அழைத்துக் கொண்டான்

அடுத்த 10 நாளில் 16 ஆம் தேதி தல்லத் 

மறைவு 

பிறந்த நாள் வாழ்த்து முக நூலில் தெரிவித்து விட்டு தொலை பேச எண்ணியிருந்தபோது எதிர் பாராத செய்தி 

உறவு என்பதைத் தாண்டி நல்ல நண்பர் 

தங்கு தடையின்றி பல செய்திகளை தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம் 

என்னுடைய குரான் தமிழ் ஆங்கில வினாக்கள் மூன்றுக்கும் சரியான விடை அனுப்புபவர் 

முன்னோர்களின்   உறவு முறைகளை நன்கு  அறிந்தவர் 

வாழ்க்கையின் சிரமங்களை உணர்ந்தவர்  தான தருமங்கள் நிறைய செய்பவர் பள்ளிவாசலோடு அதிகம் தொடர்பில் இருப்பார் 

கூடியமட்டும் தொழுக பள்ளிக்குப் போய்விடுவார்  

அவருடைய மக்கள் மருமக்கள் எல்லோரும் முக நூலில் என்  நண்பர்கள் 

மகள் அஷ்ரப் ஹமீதாவும் நானும்  நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வோம் 

Angio   செய்து சரியாகி வீட்டுக்குப் புறப்பட இருக்கும் நிலையில் திடீர் மறைவு 


அடுத்தது மனிதப் பார்வையில் கொடுமையான ஒன்று 

(இறைவன் மன்னிப்பானாக 

என்னதான் அறிவுக்கு புரிந்தாலும் மனது சிலதை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கிறது )

நெய்வேலி ராஜா மகள் ஷாஹிதா 

-40 வயது 

அறிந்தும்  அறியாத வயதில் 3 குழந்தைகள்  

தொழுது விட்டு குரான் ஓதிய சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத மறைவு 23 ஆம் தேதி 

துடிப்பான பெண் கல்வியில் மிக்க ஆர்வம்  உள்ளவர் 

தந்தை நெய்வேலி ராஜாவும் துணைவன் ஆஷி க்கும் நிலைகுலைந்து போய்விட்டனர் 

மறைந்த மூவரும் தொழுகை வணக்கம் குரான் ஓதுதல் நோன்பில் அதிகம் ஈடுபட்டவர்கள் 

அவர்களுக்கு நல்ல சுவனப் பதவி  கிடைக்க இறைவனிடம் கை ஏந்துவோம் 


மறைந்தவர்கள் குடும்பதுக்கு குறிப்பாக சாந்தி ,ராஜா, ஆஷிக்குக்கு 

பிரிவின் வலி யை த் தாங்கும் வலிமையை இறைவன் வழங்குவானாக 

இறைவனின் ஆட்சி அதிகாரத்தை நன்கு உணர்ந்து கருத்து வேறுபாடுகளை மறந்து நல்வழியில் வழியில் வாழ முயற்சிப்போம இறைவன் அருளால்



(vasi 1 only)

No comments:

Post a Comment