Friday, 28 February 2025

/ரமளான் சிறப்புப் பதிவுகள் முன்னோடி அல் பாத்திஹா 01032025 சனிக்கிழமை

 



/ரமளான் சிறப்புப் பதிவுகள்

01032025 சனிக்கிழமை
இறைவன் அருளால் (இன்று இரவு /நாளை துவங்கும்
புனித ரமளான் மாதததிற்கான சிறப்பு வினா விடையின் முன்னோடியாயக
ஸுரத்துல் பாத்திகா
பிஸ்மில்லாகிறரஹ்மானிரரஹீம்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
அ ர்ரஹ்மானிரரஹீம்
மாலிக்கி யவ் மைதீன்
இயயாக்க நவபுது வ இயயாகக நஸ்தகீன்
இஹ்தி நஸ்ஸீ ராத்தல் முஸதக்கீம்
சிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம்
கய்ரில் மக்லூபி அலைஹிம்
வலல்லாளீன் [ஆமீன் ]
தோற்றுவாய் سورة الفاتحة Al-Fatiha
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
, உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல கொண்டது.
இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அத்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.[]
• அந்த வசனம்*وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعاً مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ) الحجر87
நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.
• இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.[
அல்-ஃபாத்திஹா வேறு பல பெயர்களாலும் அறியப்படுகிறது, அல்-ஹம்த் (புகழ்)
, அஸ்-ஸலா (பிரார்த்தனை),
உம்முல்-கிதாப் (புத்தகத்தின் தாய்),
உம்முல்-குரான்(குர்ஆனின் தாய்),
சபா மின் அல்-மதானி (குர்ஆன் 15:87
ஏழு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவை),
அஷ்-ஷிஃபா' (குணப்படுத்துதல்).
எந்த ஒரு இறைவணக்கமும் , இறைஞ்சுதலும் [து ஆவும்]
மதச் சடங்கும் இதை முழுமையாக ஓதினால்தான் நிறைவு பெறும்
இனி ‘இன்றைய வினா
“இறைவன் “ என்பதற்கு திருமறை கூறும் இலக்கணம் என்ன ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவற்ற எல்லாம் வல்ல
ஏக இறைவனை வேண்டுகிறேன்
30 ஷபான் (😎 1445
01032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ
(பின்குறிப்பு : மடிக் கணனியில் புதிதாக ஏற்றிய தமிழ் எழுத்துருவில் சில பிரச்சினைகள் உள்ளன . குறிப்பாக ஒற்றெழுத்துக்கள் ஞ் ங் இவையெல்லாம் அதிக நேரத்தை எடுதுக் கொள்கின்றன
முடிந்த வரை கவனித்து எழுதுகிறேன்
அப்படியும் சில பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்
இந்த ரமளான் மாத சிறப்புப் பதிவுகளை சென்ற ஆண்டுகள் போல முழுமையாக நிறைவு செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும்

Thursday, 27 February 2025

திரு மறை குரான் .51:57 2802 2025 வெள்ளி

 



திரு மறை குரான்

.51:57

2802 2025 வெள்ளி 


தனக்கு பிறர் பொருளையோ உணவையோ வழங்குபதை தான் விரும்பவில்லை 

என இறைவன் சொல்லும் குரான் வசனம் எது ?

விடை

ஸூரா  51தாரியத் (காற்று( வசனம் 57 

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.51:57

 

சரியான விடை எழுதி வாழ்தது பாராட்டுப் பெறுவோர்

 

சகோ

 

சிராஜுதீன் – முதல் சரியான விடை

 

ஷர் ம தா&

ஹசன்  அலி 

 

விளக்கம்

அல்லாஹ் எனும் ஏக இறைவன் தேவைகளை விட்டு நீங்கியவன் என்பதை விளக்கும் வசனம்

பொருள், உணவு மட்டுமல்ல , யாரிட மிருந்தும் எந்த சேவையையும் கணிக்கையை யும் எதிர்நோக்கி அவன் இல்லை

இன்னும் சொல்லப்போனால் நாம் தொழுகை வணக்கங்களை நிறுத்தி விட்டாலும் இழப்பு ஒன்றும் அவனுக்கு இல்லை

மாறாக நமக்குத்தான் அது ஒரு இழப்பு

இது கற்றவர் தரும் விளக்கம்    

 

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

29 ஷாபான்  (8) 1446

2802025 வெள்ளி

சர்புதீன் பீ

Tuesday, 25 February 2025

ஆவியும் அலெக்ஸாவும் 26 022025 புதன்

 



ஆவியும் அலெக்ஸாவும்


25 022025 புதன்

நினைவிருக்கிறதா !

ஓயிஜா பலகை !!
பற்பல ஆண்டுகள் முன்பு சிறுவர் முதல் முதியோர் வரை
வைத்திருந்த ஒரு (விளையாட்டுப்) பலகை
விளையாட்டா இல்லை வேறா என்று சொல்ல முடியாது
விளையாட்டு என்று சொல்லும் அளவுக்கு மிக எளிதானது
ஆனால் அதன் மூலம் ஆவிகளோடு தொடர்பு கொள்ளலாம் எனும் போது அப்படி நினைக்க முடியவில்லை
உண்மையா பொய்யா , அறிவியலா உளவியலா என்று தெரியாது
ஆனால் விரலில் ஒரு துடிப்பும் அது தன்னால் நகர்வது போன்ற உணர்வும் உண்டானது உணர்ந்த உண்மை
ஒரு அட்டையில் நடுவில் ஒரு நாணயம் வைக்கும் அளவுக்கு வட்டம்
அதன் ஒருபுறம் y e s மறுபுறம் n o
அதைச் சுற்றி ஒரு வட்டத்தில் 0 முதல் 9 வரை
இன்னும் ஒரு வெளி வட்டத்தில் a முதல் z வரை
அவ்ளவுதான் ஓயிஜா பலகை
நடு வட்டத்தில் ஒரு நாணயம் அதன் மேல் பட்டும் படாமல் ஒருவர் அல்லது இருவர் விரலை வைக்க வேண்டும்
ஏதாவது ஒரு ஆவியை மெதுவான குரலில் அழைக்க வேண்டும்
ஆவி வருவது போலும் நாணயம் தன்னால் மெதுவாக நகர்வது போலும்
எண் எழுதுக்களுக்குப் போய் நம் வினாக்களுக்கு விடை சொல்வது போலும் தோன்றும்
உண்மையோ இல்லையோ ஆவிகளை அழைப்பது வேண்டாத ஒன்று என்பது என் கருத்து
மறக்கப்பட வேண்டியதை , மறக்கப் பட்டதைப் பற்றி இப்போது என்ன பேச்சு ?
நல்ல கேள்வி
காரணம் இருக்கிறது
அண்மையில் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி
AI could let people converse with their departed loved ones: Google X founder
செயற்கை நுண்ணறிவால் மறைந்தவர்களுடன் பேச முடியும்
சொல்வது யாரோ எவரோ இல்லை
Sebastian Thrun, founder of Google X (ஹிந்து 10 பிப்ரவரி 2025 )
இந்த செய்தியை ,முழு தாகப் படிக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை
இருந்தாலும் என்ன ஏது என்று அறியும் ஆர்வத்தில் செயற்கை அறிவியல் அறிஞர் (இரட்டை) முனைவர்
ஷாஜித்தை தொலை பேசியில் அழைத்தேன்
அவருடன் செய்தி உரையாடல்
From Shajith to me
Mama, I just looked at that news. He is talking about digital twins.. i.e., Alexa like virtual version that would first learn from our data on how to talk and behave like us.. and then start to imitate us in it's interaction with everyone.
Me to Shajith
That means
If I train Alexa while alive
Survivors can have the crude satisfaction of taking to me ?
The very Idea is not at all digestable to me
If my understanding is not correct please correct me
Thanks for your instant response
From Shajith
Alexa is a virtual person.. and currently it has some fixed speaking style and how it responds to different things it faces.. If that speaking style and response style are changed it will start to appear like a different person. For example, currently it has female voice .. if that voice is changed to male voice.. whoever interacts with it will imagine it like a male. Similarly if it is given comedian Vadivelu's voice and speaking style.. people will start to imagine Alexa as Vadivelu.. Likewise if it is made to respond like some specific person people iIt need not be after one's life.. can be while one is living as well.. Like I wrote in the previous message.. if it is given Vadivelu's speaking style people interacting will imagine it as Vadivelu himself in the back (who is alive).. it it is given Vivek's voice and speaking style people will imagine it as Vivek in the back (who is no more).nteracting with it will imagine it as that person.
Me to Shajith
Thanks for clarifying
Still it doesn't appeal to me
(என்) தமிழில்
From Shajith to me
செய்தி. இலக்க முறை இரட்டையர் பற்றியது
அலெக்ஸா போன்ற மெய்நிகர் பதிப்புகள் நாம் கொடுக்கும் தகவல்களில் இருந்து கற்றுக்கொண்டு நம்மைப் போல பேசவும் நடந்து கொள்ளவும் செய்யும்
Me to Shajith
அதாவது நான் உயிருடன் இருக்கும்போது அலெக்ஸா வுக்கு என்னைப் போல பேசக்கற்றுக் கொடுத்து விட்டால் எனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்னிடம் பேசுவது போன்று உணரலாம்
அப்படித் தானே !
என் புரிதல் சரிதானே
இந்த எண்ணமே எனக்குப் பிடிக்கவில்லை
நன்றி –உடன் பதிலுக்கு
From Shajith
அலெக்ஸா ஒரு மெய்நிகர் நபர்
இப்போதைக்கு அது ஒரு குறிப்பிட்ட முறையில் பேசவும் நடந்து கொள்ளவும் செய்கிறது
அதை ,மாற்றினால் வேறு நபர் போல செயல்படும்
இப்போது பெண் குரலில் பேசும் அலெக்ஸாவை மாற்றி ஆண் குரலில் பேசும்படி செய்தால் அதோடு பேசுபவர்கள் ஆணோடு பேசுவது போல உணர்வார்கள்
வடிவேலு போல பேச,நடந்து கொள்ள கற்றுக் கொடுத்தால் அலெக்ஸாவை வடிவேலு என்றே எண்ணத் தோன்றும்
அதே போல ஒரு குறிப்பிட்ட நபரின் பேச்சு ,நடவடிக்கைகளை அலெக்ஸாவுக்கு கற்றுக் கொடுத்து விட்டால் அது அந்த நபர் போலவே அவர் இருந்தாலும் மறைந்தாலும் மற்றவர்களுக்குத் தோன்றும்
Me to Shajith
விளக்கத்துக்கு நன்றி ஷாஜித்
இன்னுமே இந்த எண்ணம் எனக்குப் பிடிக்கவில்லை
எனது குறிப்பு
அலெக்ஸா என்பது செயற்கை நுண்ணறிவில் ஒரு சிறிய கருவி -விலை சில ஆயிரங்கள் முதல் -வீட்டுப் பணிகளுக்கும் பயன்படும் (படம்)
புரிவதற்காக அலெக்ஸா ஒரு ரோபோ ,எந்திர மனிதன் என்று வைத்துக்கொள்ளலாம்
மறைந்தவர்களோடு பேசுவது நடைமுறைக்கு வந்தால் ------

விரைவில் வந்து விடும் ------

இதை வைத்து என்ன என்ன மாய்மாலங்கள் ,குற்றங்கள் நடக்குமோ !!

இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்

26 022025 புதன்
சர்புதீன் பீ

Like
Comment
Send
Share

Monday, 24 February 2025

English QuIZ Swanky 25022025 Tue

 



English QuIZ

Swanky
25022025 Tue
One vowel
Letters 2 3 4 a 'widely' used
acronym in communication
What is that 6 letter word indicating luxury; starting with s?
Answer
Swanky
Greetings and congratulations to those who sent correct answers
M/S
Velavan. First correct answer
Sirajuddin &
Ganesa Subramaniam
Swanky=,(adjective informal)
stylishly luxurious and expensive.
"directors with swanky company cars
using one's wealth, knowledge, or achievements to try
to impress others.
Letters 2 3 4. W A N
Short form of wide area network
Next English QUIZ may be in the month of March ie after Holy month of Ramadan
Let's meet tomorrow by His Grace
25022025 Tue
Sherfuddin P

Saturday, 22 February 2025

தமிழ் (மொழி) அறிவோம் இளமைத் தமிழ் நிறைவுப் பகுதி 23022025 ஞாயிறு

 




தமிழ் (மொழி) அறிவோம்

இளமைத் தமிழ் நிறைவுப் பகுதி
23022025 ஞாயிறு
உகரம் குறில். ,(உ து ஙு மு)
இப்படி முடியும் 100 சொற்களை விரைவாக எதையும் பார்க்காமல் சொல்ல முடியுமா?
இது நேற்றைய பதிவின் நிறைவு வினா
விடை
ஒன்று முதல் 100 வரை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
வேலவன் முதல் சரியான விடை
தல்லத்
சிவசுப்பிரமணியன் &
கத்தீபு மாமூனா லெப்பை
இன்னும் 1 முதல் 999 வரை எல்லா எண்களும் இப்படித் தான் இருக்கின்றன
இதற்கு இலக்கணம் சார்ந்த ஒரு காரணம் இருப்பதாக படித்திருக்கிறேன்
அது இப்போது நினைவில் இல்லை
தெரிந்தால் சொல்லுங்கள்
தமிழ் மொழி ஒரு இயல்பான இயற்கையான மொழி
ஆங்கில nation போல செயற்கை ஒலி எதுவும் தமிழில் இல்லை
ஒரே எழுத்து வேறுவேறு ஒலிகளில் இயல்பாக வரும்
காகம் என்று சொல்லிப் பாருங்கள்
கா போல் க ஒலிக்காது
காஹம் என்று இயல்பாக வரும்
ஒரே ஒரு நெருடல்
எண்களில்
80 அடுத்து ஒன்பதுதானே இயல்பு
அது ஏன் தொன்னூறு ஆனது?
இப்படியே 800 க்கு அடுத்து தொள்ளாயிரம் என்று தொடர்கிறது
தமிழ். மூன்றெழுத்து
இதில் ஒன்று வல்லினம்
அடுத்தது மெல்லினம்
மூன்றாவது இடையினம்
மழலையின் முதல் சொல்
அம்மா
அந்த மூன்றெழுத்தில் ஒன்று உயிர் அடுத்து மெய்
அதற்கடுத்து உயிர் மெய்
தமிழின் எண்ணற்ற சிறப்புகளில் மிக மிக
சில இவை கடல் நீரில் சில துளிகள் போல்
சென்ற வார வினாக்களுக்கு சகோ சோமசேகர் கவிதைகளில் அனுப்பிய விடைகள் :
உயிர்வாழத் தேவைமூச்சுக் காற்று
உச்சரிக்க வெளியேறும் பாற்று
அ முல் ஒள வரை உயிர் எழுத்து
அவைதானே தமிழின் முதல் ஊற்று
ஐந்து எழுத்து அவற்றினிலே
அடங்கி ஒலிக்கும் குறிலாய்
ஏழு எழுத்து ஓங்கி ஒலிக்கும்
இரண்டு மாத்திரை நெடிலாய்
அதில் அ இ உ எ ஒ
ஐந்து குறில் ஒடுக்கம்
ஆ ஈ ஊ ஏ ஐ ௐ ஒள
என்ற நெடிலும் அடக்கம்
உச்சரிக்கும் நேரம்
நீ.ண்டு ஒலிக்கும்
அச்சரத்தை தமிழ்
நெடிலாய்க் குறிக்கும்
******* விருப்பம்*******
மொழியைத் தன்
மூச்சென்று நினைத்தான் - தமிழன்
மூன்று பத்து எழுத்துகளை
உயிர் மெய்யாய்ப் பிரித்தான்
உயிரற்ற மெய் - மொழிக்கு
உதவாதென் றறிந்தான்
உயிரோடு மெய் கலந்து
அமுதமொழி பயின்றான்
அஃதென்று பகுப்பதற்கு
அழகுவேல் முகத்தான்
ஆயுதத் தமிழ் எழுத்தோடு
அகவரிசை முடித்தான்
ஈராறு எழுத்துகளில்
இனிய தமிழ் உயிர் தான்
மூவாறு எழுத்துருவில்
மூன்று வகை மெய் தான்
உச்சரிக்கும் சப்தம் வைத்து
உரிய பெயர் கொடுத்தான்
உலக முது தமிழ் மெய்க்கு
உள்ளது மூன் றினம்தான்
வலிய ஓசை அட்சரத்தை
வல்லினமாய் வகுத்தான்
இடைக்கழுத்து எழும் ஓசை
இடையினமாய்ப் பகுத்தான்
மெலிதான ஓசை நயம்
மேவிய நல் லாறு
ஒலிச் சுவையில் உயர்வாக
உள்ளது மெல்லினம்தான்
ஒரு சொல்லில் நூறு பொருள்
உள்ள மொழி தமிழ் தான்
உலகப்பொது மறைதந்த
ஒரே மொழி இதுதான்
இயல் இசை நாடகமாய்
இளமை மாறா வழி தான்
இன்றும் என்றும் இணை சொல்ல
இல்லை வேறு மொழி காண்
எழுத எழுதத் தீராது
எங்கள் மொழி விருத்தம்
இளையதலை முறைக் கிதனை
எடுத்துச் சொல்ல விருப்பம்
ந.சோமசேகர்
15/02/2025
சகோ சோமசேகருக்கு நன்றி
இளமை ஊஞ்சலில் நான்கு நாட்கள் ஆடிக் களித்தோம்
புனித ரமலான் மாதத்தின் பின் ஏப்ரல் மாதத்தில் தமிழ் பதிவுகள் தொடரும்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
உங0உஉ0உரு
23022025 ஞாயிறு