ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
Monday, 31 March 2025
ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
Saturday, 29 March 2025
Score March 2025 Ramalan postings
Score March 2025 Ramalan postings
ரமளான் பதிவு 29 சுரா 112 113 114 30 032025 ஞாயிறு
ரமளான் பதிவு 29
ரமளான் பதிவு 29 சுரா 24தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் 29 032025 சனிக்கிழமை
ரமளான் பதிவு 29
Thursday, 27 March 2025
• ரமளான் பதிவு 27 அன்னை ஆயிஷா ரலி 28 032025 வெள்ளி
• ரமளான் பதிவு 27
அன்னை ஆயிஷா ரலி
28 032025 வெள்ளி
பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா?
திருமறையின் எந்தப் பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது ?
சு ரா 24 அன் நூர் :வசனம் 13
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ ஷர்மதா முதல் சரியான விடை
சீராஜூதீன்
2413 யார. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரவில்லையெனில், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.ப்பல்ஆலமீன்
இது போன்ற கருத்து வசனம் 24:4. 24:12 இரண்டிலும் வேறு சொற்கள் பொருளில் வருகிறது
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர், அவர்களது சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:12. இதனை நீங்கள் கேள்விப்பட்டபொழுது நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும் தங்களைப் (போன்ற நம்பிக்கையாளர்களைப் பற்றி) நல்லதையே எண்ணி, "இது பகிரங்கமான அவதூறு" என்று கூறியிருக்கவேண்டாமா?
ஆனால் 24: 13 நபி பெருமானை கேட்பது போல தோன்றுகிறது சுருக்கமான கேள்வி –
ஆனால் சுருக்கென்று குத்தும் கேள்வி . ஆழ்ந்த கருத்துச் செறிந்த கேள்வி
கேட்பவனோ ஏக இறைவன்
இதற்கு விடை, விளக்கம் காண இந்தக் கேள்வி எழ காரணம் என்ன , காரணமான அவதூறு என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்
தடைகள் எதிர்ப்புகளை மீறி இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது
குறிப்பாக பத்ருப் போரின் வெற்றிக்குப்பின் பலரும் மனம் விரும்பி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன் வருகிறார்கள்
தங்கள் முயற்சிகள் தோல்வி அடைவது கண்ட எதிர்ப்பாளர்கள் , வேறு வழிகள் பற்றி சிந்தித்து அவதூறு பரப்புதல் வீண் பழி சுமத்துதல் குழப்பம் உண்டாக்குதல் போன்ற வழிகளில் ஈடுபடுகிறார்கள்
அவர்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு
நாயகங்களின் அருமை மனைவி, அபு பகர் மகள் அன்னை ஆயிஷா பற்றிய அவதூறு
இரவில் ஓர் இடத்தில் தங்கியிருந்த நபி பெருமான் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் அதி காலையில் மீண்டும் மதினா நோக்கிப் பயணிக்கத் துவங்குகிறார்கள்
அன்னை ஆயிஷா புறப்பட சற்று நேரமாகிவிடுகிறது . மிக மெலிதாக எடை குறைவாக இருக்கும் அன்னை அவர்கள் உள்ளே உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுடைய பல்லக்கை தூக்கி ஒட்டகத்தின் மேல் வைக்க, அது மதீனா நோக்கிச் செல்கிறது தனித்து விடப்பட்ட அன்னை தன்னைத் தேடி யாரவது வருவார்கள் என்று காத்திருந்து அப்படியே தூங்கி விடுகிறார்
அந்த வழியே வந்த சத்வான் பின் முஆட்டை சுலமி( Safwan bin Mu'attal Sulami )
புனித நபியின் துணைவி தனியே இருப்பது கண்டு பதறி ஒட்டகத்தை நிறுத்தி அதன் மேல் அன்னை அவர்கள் ஏறி அமரச் செய்து ஒட்டகத்தின் மூக்கனாங்கயிறைபிடித்தபடி ஒட்டகத்தை ஒட்டி வருகிறார்
இது போதாதா ! வெறும் வாயை மென்று கொண்டிருந்தவ்ர்களுக்கு அவல் வெல்லம் தேங்காய் எல்லாம் சேர்ந்து கிடைத்தது போல் கடித்து மென்று துப்பித் தூற்றுகிறார்கள் எதிரிகள் .
இந்த தூற்றலுக்குத் தலைமை தாங்கியவன் அப்துல்லா பின் உபை
நபியின் துணைவி வழி தவறி விட்டார் என்று வாய் கூசாமல் தூற்றினான்
மதீனா போனவுடன் உடல் நலம் குன்றி ஒரு மாதம் படுக்கையில் இருந்த அன்னைக்கு இது எதுவும் தெரியாது
இருந்தாலும் உடல் நலமின்றி இருந்தால் உடன் ஆறுதல் சொல்லல வரும் நபி அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக வரவில்லையே என்ற உறுத்தல் இருந்தது . ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது
தன உறவினர் ஒருவர் மூலம் நடந்தவை பற்றி அறிந்த அன்னை நிலை குலைந்து போய் அன்று இரவு முழுதும் அழுது கொண்டே இருந்தார்
இதற்கிடையில் நபி அவர்கள் தனக்கு நெருக்கமான அலியிடமும் உசாமா பின் சய்யிதிடமும் அன்னை பற்றி விசாரிக்க , நல்லதைத் தவிர வேறு எதையும் நான் அன்னையிடம் கண்டதிலை என சய்யித் சொல்கிறார் .
அலி சொன்னபடி அன்னை ஆயிஷா அவர்களின் பணிபெண்ணைக் கூப்பிடடு விசாரிக்க அவரும் நல்லதைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை என்கிறார்
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நபிகள் அன்னை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவர் அருகில உட்கார அன்னையின் தாய் தந்தையும் உட்காருகிர்ர்கள்
நபி பெருமான் சொல்கிறார்
ஆயிஷா உன்னைப்பற்றி கேள்விப்பட்டேன்
உன்மேல் குற்றம் இல்லை என்றால் இறைவன் அதை –உன் தூய்மையை வெளிகாண்பிப்பான்
நீ தவறு செய்திருந்தால் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் இறைவன் உன்னை மன்னித்து விடுவான் என்கிறார்
அன்னை ஆயிஷாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
இதற்கு தன் தந்தை தாய் தகுந்த மறுமொழி சொல்வார்கள் என்று அவர்கள் முகம் பார்க்க அவர்களோ என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்
இப்போது அன்னை ஆயிஷாவே பேசுகிறர்கள், வாதிடுகிரறாக்கள் ,, வழக்காடுகிறார்கள்
“ நான் தவறு செய்யவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பம் மன நிலையில் இல்லை
நான் செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொண்டால் நீங்கள் நம்பி விடுவீர்கள்
பொறுமை காப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை
உண்மையை அறிந்த இறைவன் அதை வெளிக்காட்டுவான் என ஈனக்கு நம்பிக்கை இருந்தது
ஆனால் எனக்காக ஒரு இறை வசனத்தை இறக்கி வைத்து அதை காலத்துக்கும் மக்கள் படித்து உணர வைப்பான் என நினைக்கவில்லை
நபி பெருமான் கனவில் வந்து உண்மை வெளியாகும் என நினைத்தேன்
இந்த நிலையில் அந்தக் கடும் குளிர் காலத்தில் நபி அவர்கள் முகத்தில் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள் – இறை வசனம் இறங்கப் போவதன் அறிகுறியாக
நாங்கள் மூச்சைக் கூட அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தோம்
தவறு செய்யாத எனக்கு துளியும் பயம் அச்சம் இல்லை
ஆனால் என் பெற்றோரோ இறைவன் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற நடுக்கத்தில் இருந்தார்கள்
வஹி வந்து முடிந்த பின் நபிகள் முகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி
“
வாழ்த்துகள்
ஆயிஷா , இறைவன் உன் தூய்மைக்கு சான்று பகர்ந்து விட்டான் சென்று சொல்லி வசனங்கள் 24-- 11-21).ஐ படித்துக் காண்பித்தார்கள்
உடனே என் தாய் எழுந்து என்னிடம் – நபி பெருமானுக்கு நன்றி சொல் என்றார்கள்
நான் நபிக்கோ ,உங்களுக்கோ , தந்தைக்கோ நன்றி சொல்ல மாட்டேன்
இறைவனுக்கு மட்டுமே என் நன்றி
என் மேல் சுமத்தப்பட்ட வீண் பழியை மறுத்து நீங்கள் யாரும் ஒரு சொல் கூட சொள்ளவில்லையே என்று சொல்லி விட்டேன்
ஒரு பெண்ணின் – வீண் பழி சுமத்தப்பட்ட ஒரு கற்புக்கரசியின் கோப தாபங்களை உணர்சசிகளை , எண்ண ஓட்டங்களை மிக அழகாக , அமைதியாக வெளிப்படுத்துகிறார் அன்னை
சற்றும் தயங்காமல் என் நன்றி நபிக்கோ , பெற்றோருக்கோ இல்லை என்று சொல்கிறார்
64 வ்சனங்கள் கொண்ட இந்த சூராவில் மிகப்பல செய்திகள் சொல்லப்டுகின்றன
இந்த இழி செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் அவரவர் பங்குக்கேற்ப கடும் தண்டனை உண்டு (24:11)
நீங்கள் இதனைச் செவியுற்றபோதே நம்பிக்கையுள்ளவர்கள் ஏன் தங்களைப்பற்றி நல்லெண்ணம் கொள்ளவில்லை ?
இது ஒரு அப்பட்டமான அவதூறு என்று ஏன் அவர்கள் கூறவில்லை:? •24:12
24 13 யார. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரவில்லையெனில், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.ப்பல்ஆலமீன்2.
இதுதான் துவக்கத்தில் பார்த்த வசனம்
(என் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது )
அறிஞர்கள் கூறும் விளக்கம் :
நபி பெருமான் குற்றம் சாட்டப்பட்டவரின் துணைவன் என்பதையும் தாண்டி ஒரு மன்னர், தலைவைர் ,ஆட்சியாளர்
அவர் விரைவாக ஒரு முடிவு, கருத்து சொன்னால் அது ஒரு தலைப் பட்சமான தீர்ப்பாகக் கருதப்படும் . பழி நீங்காது
எனவே இறைவன் தீர்ப்பு வரும்வரை நபி அமைதி காத்தார்கள் . இறைவன் மொழிக்கு மாற்று ஏது
இதே விளக்கம்தான் அன்னையின் பெற்றோர் பற்றியும் சொல்லப்படுகிறது
(பின் யாரை இறைவன் கேட்கிறான் ? )
சான்று பகர்வோர் 4 பேர் இல்லாமல் குற்றம் சுமத்திய அவர்கள்தான் இறைவன் பார்வையில் குற்றவாளிகள் (24:13)
இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் அருளும் கருணையும் உங்களுக்குக் கிடைகாகம்ல் போயிருந்தால் நீங்களும் ஒரு பெரும் தண்டனைக்கு உள்ளாகி இருப்பீர்கள்(24:14)
ஏதும் அறியாத ஒரு செய்தியை நீங்கள் ஒருவொருக்கொருவர் பரப்பிக் கொண்டிருந்தீர்கள்
உங்களள் பார்வையில் இது ஒரு எளிய , சாதர்ணமான செய்தியாய் இருக்கலாம்.
ஆனால் இறைவன் பார்வையில் இது ஒரு மிகக் கொடிய செயல் (24:15)
கேள்விப்பட்டவுடனே இது மிகப் பெரும் வீண் பழி , இது பற்றிப் பேசுவதே தவறு என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை (24:16)
நீங்கள் நம்பிக்கை கொண்டவர் என்பது உண்மையானால் இது போன்ற ஒரு தவறை மீண்டும் செய்யாதீர்கள் என இறைவன் தெளிவு படுத்துகிறான் (24:17,18)
மானக் கேடான செயல் பரவிட விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் கடும் வேதனை நிச்சயம்
இச்செயல் படு மோசமான விளைவுளை உண்டாக்காமல் காத்தது இறைவன் கருணை , பரிவால்தான் (24:19. 20)
தவறோ சரியோ
சில தமிழ் இலக்கிய வரிகள் என நினைவில் வரு கின்றன
உரை சால் பத்தினிக்கு -----------
பெண்ணின் பெருந்தக்க --------------
இன்றைய வினா சுரா 24 சொல்லும் தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் எவை ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
27ரமளான் (09) 1446
28 032025 வெள்ளி
சர்புதீன் பீ
Wednesday, 26 March 2025
ரமளான் பதிவு 26 மன்னன் மகள் பதிமா ரலி 27 032025 வியாழன்
ரமளான் பதிவு 26
Tuesday, 25 March 2025
ரமளான் பதிவு 25 சுரா 67 முல் க் (ஆட்சி) 26 032025 புதன்
ரமளான் பதிவு 25
Monday, 24 March 2025
ரமளான் பதிவு 24 சுரா 62 ஜூமுஆ 25 032025 செவ்வாய
ரமளான் பதிவு 24
Sunday, 23 March 2025
ரமளான் பதிவு 23 • சுரா 73 முஜ்ஜம்மில் • 24 032025 கிங்கள்
ரமளான் பதிவு 23