Saturday, 8 March 2025

ரமளான் பதிவு 8 ஈமான் 09032025 ஞாயிறு





 ரமளான் பதிவு 8

ஈமான்
09032025 ஞாயிறு
முன் குறிப்பு
இதுவரை வந்த ரமளான் பதிவுகள் பெரும்பாலும் குரான் வசனங்கள் அடிப்படை யில் இருந்தன
இனிவருபவை ,குரான், நபிமொழி (ஹதீஸ் ) கேட்டவை அடிப்படையில் இருக்கும்
குரானில் உள்ள குறிப்புகளுக்கு நபி பெருமான் சொல்லிய விளக்கம் இல்லமல் நோன்பு , ஹஜ் ,ஜக்காத் பற்றி நாம் அறி ய முடியாது
தொடர்ந்து
ஈமான் என்றால் என்ன ?
மிக எளிய வினா ,எளிய விடை
குரானில் பல இடங்களில் வரும் சொல்
சுருக்கமாக நம்பிக்கை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் -முதல் சரியான விடை
ஷர்மதா
மெ கராஜ் &
பாப்டி
ஈமான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும், மேலும் அது இல்லாமல் ஒரு முஸ்லிம் என்ற முறையில் வாழ முடியாது.
ஈமான் என்பது, இஸ்லாமிய இறையியலில்,
அல்லாஹ்வையும்,
அவனது தூதர்களையும், வானவர்களையும்,
வேதங்களையும்,
மறுமை வாழ்வையும் நம்புவதையும்,
அவற்றுக்கு கட்டுப்பட்டு வாழ்வதையும் குறிக்கிறது
குர்ஆன் ஈமானின் முக்கியத்துவத்தை பல வசனங்களில் எடுத்துரைக்கிறது, அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
• "நிச்சயமாகவே, ஈமான் கொண்டவர்கள், நல்ல செயல்கள் செய்பவர்கள், அல்லாஹ்வை நேசிப்பவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:124)
• "ஈமான் கொண்டவர்கள், நல்ல செயல்கள் செய்பவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:151)
• "நல்ல செயல்களைச் செய்பவர்கள், ஈமான் கொண்டவர்கள், மறுமை நாளில் நம்பிக்கை வைப்பவர்கள், இவர்களே வெற்றி பெறுவார்கள்.": (குர்ஆன் 2:222)
• "ஈமான் கொண்டு நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு, சொர்க்கத்தில் தங்குமிடம் உண்டு.": (குர்ஆன் 2:82)
• "ஈமான் கொண்டு நல்ல செயல்கள் செய்பவர்கள், சொர்க்கத்தில் தங்குமிடம் உண்டு, அங்கு அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.": (குர்ஆன் 3:104)
இவை சில வசனங்கள் மட்டுமே, மேலும் பல வசனங்கள் ஈமானின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
e Divine Name mentioned in verse 3.[4]
40:84. எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று.
ஈமான் எல்லோரும் அறிந்த ஒன்று
இருந்தாலும் இந்த புனித மாதத்தில் ஈமான் பற்றிப் பார்ப்பது நாம் ஈமானை மேலும் உறுதியாக்கும்
இன்றைய வினா
இன்று ஈமான் பற்றிப் பாரத் தோம்
மற்ற கடமைகளில் குரானில் மிகவும் வலி யுறுடத் தி சொல்லப்படு ம் பொதுக் கடமை எது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
08 ரமளான் (09) 1446
09032025 ஞாயிறு
சர்புதீன் பீ

Friday, 7 March 2025

ரமளான் பதிவு 7 இத்ரீஸ் நபி 08032025 சனிக்கிழமை

 




ரமளான் பதிவு 7

இத்ரீஸ் நபி
08032025 சனிக்கிழமை
பாடம் கற்றுக் கொடுப்பவர் என பொருளுடைய பெயர் கொண்ட
நபி யார் ?
விடை
இத்ரீஸ் நபி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
சீராஜூதீன் &
கத்தீபு மாமூணா லெப்பை
இத்ரீஸ் நபியின் பெயர் குரானில் இரண்டு இடங்களில் மட்டுமே
வருகிறது
19:56 (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக(மிக்க சத்தியவானாக), நபியாக இருந்தார்
21:85 இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே
திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது, அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப் பட்டவர் இத்ரீஸ் நபி ஆவார். இவர் வேதங்களை நன்கு கற்றவர், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தவர் என்பதால், இத்ரீஸ் என அழைக்கப்பட்டார்.
பதிவு கரானின் அடிப்படையில் இருபபதால் இதற்கு மேல் சொல்ல ஒன்றும்இல்லை
இன்றைய வினா
ஈமான் என்றால் என்ன ?
மிக எளிதான வினா
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
07 ரமளான் (09) 1446
08032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ

See insights and ads
Like
Comment
Share

Thursday, 6 March 2025

ரமளான் பதிவு 6 ஸாலிஹ் நபி துல்கிஃப்ல் நபி எலியா (எலியாஸ்) நபி 07032025 வெள்ளி





 ரமளான் பதிவு 6

ஸாலிஹ் நபி
துல்கிஃப்ல் நபி
எலியா (எலியாஸ்) நபி
07032025 வியாழன்
குரானில் மிக அதிகமாக காணப்படும் நபியின் பெயர் என்ன ?
மிகக் குறைந்த இடங்களில் குறிப்பிடப்படும் நபி யார் “
விடை:
குரானில் மிக அதிகமாகக் காணப்படும் நபியின் பெயர் மூஸா ஆகும். இவர் ஏறத்தாழ 136 இடங்களில் குறிப்பிடப்படுகிறார்.
குறைந்த இடங்களில் குறிப்பிடப்படும் நபிமார்கள்:
துல்கிஃப்ல் (Thul-Kifl) , ஸாலிஹ், எலியாஸ் (Elias) ஆகியோரின் பெயர்கள் இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்ரீஸ் (Idris) , யூனுஸ் (Yunus) ஆகியோரின் பெயர்கள் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சி ராஜூதீன் முதல் சரியான விடை
பாப்டி
பாதி விடை சொன்ன ஷி ரீன் பாரூக்குக்கு ½ பாராட்டு
முயற்சித் த சகோ மெ கராஜுக்கு நன்றி
இனி நபி ஸாலிஹ் (சலேஹ்)
பற்றி குரான் அடிப்படை யில் :
7:73. 'ஸமூது' கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர், (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; (இதற்காக) நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; இது அல்லாஹ்வின் ஒட்டகமாகும்; உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (இது வந்துள்ளது); எனவே, இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விட்டுவிடுங்கள்; அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள்; (அப்படிச் செய்தால்) அப்போது உங்களை நோவினை செய்யும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்
, தமூத் மக்கள் கிட்டத்தட்ட சாலிகையின் மேல் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர்
: இறைவனால் நபியாக அனுப்பபட்ட அவர் செல்வந்தர்களின் தன் நலத்திற்கு எதிராகப்பேசவும் ஷிர்க் நடைமுறையைக் கண்டிக்கவும் அனுப்பப்பட்டார் ( அரபு : شِرْك , அதாவது ' பலதெய்வக் கொள்கை '). avar
, தமூத் மக்கள் அவரது எச்சரிக்கையைக் கேட்க மறுத்து, அதற்குப் பதிலாக சாலிகிடம் ஒரு அற்புதத்தைச் செய்யும்படி கேட்டனர். அவர்கள் சொன்னார்கள்:
சலேஹ் தனது மக்களுக்கு கல்லால் கட்டப்பட்ட அரண்மனைகள் மற்றும் அரண்மனைகளை நினைவூட்டினார், [
அண்டை சமூகங்களை விட அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை நினைவுபடுத்தினார். மேலும், அவர்களின் மூதாதையர்களான ஆத் பழங்குடியினரைப் பற்றியும், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் அவர் அவர்களிடம் கூறினார் .
தமூத் மக்களில் சிலர் ஸாலிஹீன் வார்த்தைகளை நம்பினர்,
ஆனால் பழங்குடித் தலைவர்கள் அவருக்குச் செவிசாய்க்க மறுத்து, அவரது நபித்துவதை உறுதி செய்ய ஒரு அற்புதத்தை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரினர். [
இறைவன் தமூத் இனத்தவருக்கு ஒரு இறையருள் பெற்ற பெண் ஒட்டகத்தை அனுப்பினான் ஒட்டகத்தை அமைதியாக மேய்ச்சலுக்கு அனுமதிக்கவும், அதற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும் பழங்குடியினரிடம் கூறப்பட்டது. [
ஆனால் ஸாலிஹீன் எச்சரிக்கையை மீறி, பழங்குடி மக்கள் ஒட்டகத்தை நரம்பிலிருந்து வெட்டினர் . [
இறைவனின் சினம் அவர்கள் மீது இறங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன என்று ஸாலிஹ் அவர்களுக்குத் தெரிவித்தார்.
நகர மக்கள் வருத்தப்பட்டனர், [ ஆனால் அவர்களின் குற்றத்தை சரிசெய்ய முடியவில்லை,
நகரத்தில் இருந்த அனைத்து நம்பிக்கையற்ற மக்களும் ஒரு நில நடுக்கத்தில் கொல்லப்பட்டனர் .
நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் உயிர் பிழைத்தனர். [ 20 ]
துல்கிஃப்ல் (Dhul-Kifl)நபி
திருக்குரானில், தூ அல்-கிஃப்ல் (Dhu al-Kifl) பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள்:
• அல்-அன்பியா சூராவில், 21:85-86 வசனத்தில், "இஸ்மாயீல், ஏனோக், தூ அல்-கிஃப்ல் ஆகியோரை நினைவில் கொள்வோம். அவர்கள் அனைவரும் நிலையானவர்கள். அவர்களை நம் கருணையில் ஏற்றுக்கொண்டோம், ஏனெனில் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
• அல்-சாட் சூராவில், 38:48 வசனத்தில், "இஸ்மாயீல், எலிசா, தூ அல்-கிஃப்ல் ஆகியோரை நினைவில் கொள்வோம். அவர்கள் அனைவரும் சிறந்தவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தூ அல்-கிஃப்ல், திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபி. தூ அல்-கிஃப்ல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று இன்னும் விவாதம் நிலவுகிறது. சிலர், தூ அல்-கிஃப்ல் என்றால் "கிஃப்ல் நகரத்தைச் சேர்ந்த மனிதர்" என்று பொருள் என்று கருதுகின்றனர். கிஃப்ல் என்பது, புத்தர் தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகள் செலவிட்ட நகரமான கபிலவஸ்துவின் அரபிப் பெயர்.
இவர் பற்றி வேறு ஒன்றும் தகவல் குரானில் இல்லை
நபி எலியா (எலியாஸ்)
எலியாவைப் பற்றி குர்ஆனில்
, அவரது பேச்சு சுருக்கமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. எலியா தனது மக்களிடம் அல்லாஹ்வை வணங்கவும், அந்தப் பகுதியின் முதன்மை சிலையான பாலை வணங்குவதை விட்டுவிடவும் சொன்னதாக குர்ஆன் கூறுகிறது . குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: [ 1 ]
"நிச்சயமாக எலியா இறைத்தூதர்களில் ஒருவராக இருந்தார். அவர் தனது சமூகத்தாரிடம், "நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சமாட்டீர்களா?" என்று கேட்டபோது, "நீங்கள் படைப்பாளர்களில் சிறந்தவரான அல்லாஹ்வை விட்டுவிட்டு, உங்கள் இறைவனையும், உங்கள் முன்னோர்களின் இறைவனையும், விட்டுவிட்டு, பஃலு' (எனும் சிலையை)அழைப்பீர்களா?"
— அஸ்-சாஃபாத் 123–126
எலியாவின் மக்களில் பெரும்பாலோர் தீர்க்கதரிசிநபி யை மறுத்து, சிலை வழிபாட்டைத் தொடர்ந்து பின்பற்றினர் என்பதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் எலியாவைப் பின்பற்றி அல்லாஹ்வை நம்பி வணங்கினர் என்று அது குறிப்பிடுகிறது.
குர்ஆன் கூறுகிறது, "அவர்கள் (எலியா) அவரை மறுத்தனர், மேலும் நிச்சயமாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், அல்லாஹ்வின் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள அடியார்களைத் தவிர (அவர்களில்). மேலும், நாம் அவரது (நினைவை) சந்ததியினருக்கு விட்டுச் சென்றோம்." [ 18 ] [ 19 ]
குர்ஆனில், அல்லாஹ் எலியாவை இரண்டு இடங்களில் புகழ்கிறான்:
எலியாஸ் மீது சாந்தி உண்டாகட்டும்! நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகிறோம். அவர் மெய்யாகவே நம் நம்பிக்கை கொண்ட அடியார்களில் ஒருவர்.
— குர்ஆன், அத்தியாயம் 37 ( அஸ்-சாஃபாத் ), வசனம் 129–132
மேலும் ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, எலியா ஆகியோர் அனைவரும் நல்லடியார்களில் இருந்து வந்தவர்கள்.
— குர்ஆன், அத்தியாயம் 6 ( அல்-அன்'ஆம் ), வசனம் 85 [ 21 ]
இன்றைய வினா
பாடம் கற்றுக் கொடுப்பவர் என பொருளுடையச பெயர் கொண்ட நபி யார் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
06ரமளான் (09) 1446
07032025 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday, 5 March 2025

ரமளான் பதிவு 5 நபி லூத் 06 032025 வியாழன்




 ரமளான் பதிவு 5

நபி லூத்
06 032025 வியாழன்
நபி இப் ரஹீம் அவர்களுக்குக்கு வானவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன ?
இன்னொரு பணிக்காக வும் அந்த வானவர்கள் வந்தார்கள்
அது என்ன பணி ?
விடை
வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நபி அவர்களுக்கு இறைவன் அருளால் அறிவு நிறைந்த ஒரு ஆண் பிள்ளை பிறக்கும் என்ற நற்செய்தி வானவர்கள் கொண்டு வந்தது
இன்னொரு பணி தீய செயல்களில் வாழும் லூத் சமுதாயத்தை அழிப்பது
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சி ராஜூதீன் முதல் சரியான விடை
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
அரை விடை சொன்ன
சகோ ஷர்மதாவுக்கு ½ பாராட்டு
தொடர்ந்து
லூத் நபி பற்றிய குரான் செய்திகளைப்பார்ப்போம்
நபி மார்கள் நூஹ், ஹூத் ,ஸாலிஹ் ,ஷூ அயப் வரிசையில் குரான் லூத் நபியை யும் குறிப்பிடுகிறது
இந்த நபிகள் ஒரு சமுதாயத்தை எச்சரிக்க செய்ய இறைவன் ஆணைப்படி வருகிறார்கள்
அந்த சமுதாய மக்களில் சிலர் நபி மார்கள் சொற்களை பின்பற்றுகிறார்கள்
மற் றவர்கள் நபி மார்களை கிண்டல் செய்து அவர்களை தண்டிக்க முயல்கிறார்கள்
அதனால் அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்
நபிமார் இஸ்மாயில் , யூனுஸ் போன்று நபி லூததும் மனித சமுதாயத்தில் மேன்மை பெற்றவாராய் இருந்தார் Arabic: ٱلْعَـٰلَمِينَ, romanized: al-'aalameen, lit. 'the worlds')
சில வானவர்கள் மனித உருவில் விருந்தினாராக நபி இப்ராஹீமிடம் வந்து நபிகள் துணைவி சாரா கருததரித்து இருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
மேலும்இறைவன் ஆணைப்படி தவறு செய்யும் லூத் சமுதாயத்தை களிமண் மழை பொழியச் செய்து அழிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்
நபி லுத்தும் அவறைப்பின்பற்றுவோரும் காப்பாற்றப் படுவார்கள்
ஒரு நல்ல மனிதரான லுத்தின் துணைவியாக இருந்தும் அவரை நம்ப மறுத்த அந்தப்பெண் இரைமறுப்பாளர்களுக்கு ஒரு எடுதுக்காட்டாக இருக்கிறார் , அவருக்கு நரகம் உறுதி என இறைவன் சொல்கிறான்
வழிப்பறிக் கொள்ளை போன்ற பல தீய செயலகளோடு ஆண்கள் பெண்களுக்குப்பதில் ஆண்களை விரும்பும் கொடிய பாவத்தில் ஈடு பட்ட மக்களை நல்வழிப் படுத்த முயன்ற லூத் நபியை கிண்டல் செய்து ஊரிலிருந்து வீரட்டு வோம் என்று மிரட்டினர்
மூன்று வானவர்கள் அழகிய ஆண்கள் உருவில் லூதின் விருந்தினராக வருகிறார்கள்
அபர்களை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற தமக்கு வலிமை இல்லையே என நபி வருந்துகிறார்
விருந்தினர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி ஊர் மக்கள் கேட்கிறார்கள்
நபி அவர்களுக்கு விருந்தினருக்குப் பதிலாக தம் பெண் மக்களை திருமணம் செய்து வைக்க முன் வருகிறார்
தீயவர்கள் பிடிவாதமாக உங்கள் விருந்தினர்தாம் தேவை என்கிறார்கள்
பின்பு வானவர்கள் தாங்கள் யார் என்பதை நபிக்கு சொல்கிறார்கள்
உங்களையும் உங்களைப் பின்பற்றி நடப்பவரையும் நாங்கள் காப்பாற்றுவோம்
என்கிறார்கள்
வானவர்கள் சொன்னபடி நபி தன் கூட்டக்தோடு இரவில் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஊரை விட்டு வெளியேறுகிறார்
அதிகாலையில் இறைவன் கட்டளை , சாபம் இறங்குகிறது
“ஊரை தலைகீழாக பு ரட்டி ப்போட்டு , குவியல் குவியலாக சுட்ட களி மண் கற்களை மழையாகப் பொழியச் செய்தோம் ?
என்கிறான் இறைவன்
தீய செயல்களுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை என்பதை இறைவன் உணர்த்துகின்றான் ,எச்சரிக்கிறான்
கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் எனாமல் உணர்ந்து திருந்தி
வாழ்வது நம் பொறுப்பு
இன்றைய வினா
குரானில் மிக அதிகமாக காணப்படும் நபியின் பெயர் என்ன ?
மிகக் குறைந்த இடங்களில் குறிப்பிடப்படும் நபி யார் “
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
05 ரமளான் (09) 1446
06 032025 வியாழன்
சர்புதீன் பீ

Tuesday, 4 March 2025

ரமளான் பதிவு 4 யூனுஸ் நபி 05032025 புதன்




 ரமளான் பதிவு 4

யூனுஸ் நபி
05032025 புதன்
ஜோனா ,
ஜோப்
இவர்கள் யார் ?
விடை
ஜோனா ,யூனுஸ் நபி
ஜோப் அய்யூப் நபி இவர்களின் பைபிளில் வரும் ஹீப்ரு மொழிப் பெயர்கள்
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
தல்லத்
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
மீனால் விழுங்கபட்ட நபி யூனுஸ் என்பது பலரும் அறிந்த ஒரு செய்தி
அவரைபயற்றி குரான் வசனங்கள் அடிப் படையில் பார்ப்போம்
தம் சமுதாயடக்தை எச்சரிக்கை செய்து வழி காட்ட இறைவன் அனுப்பிய நபி அவர்
அவர் தப்பி ஓடி ஒரு கப்பலில் ஒளிந்து கொள்கிறார்
அவர் எதற்காக ஓடி ஒளிகிறார் என்பது பற்றி குரானில் குறிப்பு இல்லை
கற்றறிந்தோ ர் தரும் விளக்கம்
இறைவனின் அனுமதி இன்றி தம் சமுதாயத்துக்கு ஒரு கெடு விதிக்கிறார் :
மூன்று நாட்களுக்குள் நீங்கள் திருந்தாவிட்டால் உங்களுக்கு பெரும் கேடு வந்து சேரும்
என்று
அந்த மூன்று நாட்கள் கூட த்திராமல் தம் சமுதயாத் தினரிடம் சி னம் கொண்டு அவர்களை விட்டு வெளியேறுகிறார்
இதற்கும் அவர் இறைவனிடம் அனுமதி பெறவில்லை
தம் தவறை உணர்ந்த அவர் அனுமதி இன்றி தப்பி ஓடும் அடிமை போல ஓடி ஒளிகிறார்
அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பயணிகளையும் கப்பலையும் காப்பாற்ற யாராவது ஒருவரை இறக்கி ஆக வேண்டும்
சீட்டுக் குலுக்கி பார்ததில் யூசுப் நபியின் பெயர் வருகிறது
எனவே அவர் கடலுக்குள் தூக்கி எறியப்படுகிறார்
அங்கு ஒரு பெரிய மீன் தவறு செய்த அவரை விழுங்கி விடுகிறது
மீன் வயிற்றுக்குள் இருந்தபடி நபி இடைவிடாமல் இறைவனை வணங்கி வாழ்த்திக் கொண்டிருந்தார்
அதன் காரணமாக இறைவன் அருளால் மறுமை நாள் வரையில் மீன் வயிற்றில் இருக்காமல் நோயுற்றநிளையில் ஒரு வெட்ட வெளியில் அதிலிருந்து வெளியே ற்றபட்டார்
அங்கு ஒரு சுரைக்கொடியை மு ளைக்க வைத்து இறைவன் அவருக்கு நிழல் கொடுக்கிறான
இவ்வளவுதான் குரான் சொல்வதும் அதற்கு விளக்கமும்
நபியே தவறு செய்தாலும் இறைவனின் கடுமையான தண்டனை
உறுதி
அது போல தவறை உணர்ந்து வருந்தி மன்னிப்புக் கே ட்டால் எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பு உண்டு என்பதை யூனுஸ் நபியின் வரலாறு நமக்குத் தெளிவு படுத்துகிறது
இன்றைய வினா
நபி ஓபரஹீம் அவர்களுக்குக்கு வானவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன ?
இன்னொரு பணிக்காக வும் அந்த வானவர்கள் வந்தார்கள்
அது என்ன பணி ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
0 4 ரமளான் (09) 1446
05 032025 புதன்
சர்புதீன் பீ
(மீனின் வயிற்றுக்குள் மனிதன் உயிர் வாழ் வது என்பது நம்ப முடியாத ஒன்று என்று சிலர் வாதிடுகிறார்கள்
இங்கிலாந்து நாட்டில் விபத்து ஒன்றில் ஒரு மீ னவர் 100 டன் எடை உள்ள மிகப் பெரிய மீனின் வயற்றுக்குள் போய்விடுகிறார்
60 மணி நேரம் சென்று அவர் உயிருடன் மீட்கப் படு கிறார்
இறைவனின் தூதரான ஒரு நபி உயிரோடு மீண்டு வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை (Towards understanding Quran )

Monday, 3 March 2025

ரமளான் பதிவு 3 தா வூத் நபி 04032025 செவ்வாய்

 




மளான் பதிவு 3

தா வூத் நபி
04032025 செவ்வாய்
வேதம் அருளப் பெற்ற நபிகள் யார் யார் ? என்ன என்ன வேதங்கள் ?
விடை
நபி மூஸா – தவ்ராத் வேதம் (Torah ) -ஈஸா நபி -இஞ்ஜீ ல் ((Bible) தாவூத் நபி –ஜபூர் (Zabur)
முகமது நபி -குரான் (Quran )
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
மெ கராஜ்
சர்மதா
தல்லத்
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
தாவூத் நபி பற்றி பல குறிப்புகளும் , அவருக்கு அருளபட்ட ஜபூர் வேதம் பற்றி சில குறிப்புகளும் குரானில் காணப் படுகின்றன
அவர் நபியாகவும் ரசூலாகவும் இருந்தார்
(இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று குழப்பிக் கொள்ளாமல் இரண்டும் ஒன்றே என்று வைத்துக்கொள்வோம் )
மேலும் அரசராகவும் ஆட்சி செய்தார்
அவருக்கு இறை செய்தியான வஹீ அறிவிக்ப் பட்டது
ஜபூர் வேதமும் அருளப் பெற்றது
அவருக்கு ஆழந்த அறிவையும் சரியான நியாயத் தீர்ப்பு வழங்கும் திறனையும் இறைவன் கொடுத்திருந்தான்
படை கலன்கள் செய்யும் திறமை கொண்ட அவருடைய வீரத்துககு சான்று அரக்க உருவம் கொண்ட கோலியத்தை போரில் வென்று உயிரைப் போக்கியது
இவர் இறைவனைப் புகழ்ந்து பாடும்போது மலைகளும் பறவைகளும் இவரோடு சேர்ந்து பாடுமாம்
ஒரு வழக்கில் தவறான தீர்ப்பு சொன்ன நபி தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்து இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்
அதற்கு மறுமொழியாக இறைவன்
. ஆகவே, நாம் அவருக்கு அக் குற்றத்தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய அந்தஸ்தும், அழகிய இருப்பிடமும் உண்டு. (
3(8:25(
என்று அவரை மேன்மைப்படுத்து கிறான் அந்த சுரா 3(8
(சாத் ) தாவூத் சூரா என்று சொல்லப்படுகிறது
அரசாட்சி அதிகாரம் வழங்கபட்ட ஒரு சில நபிகளில் தாவுதும் ஒருவர்
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இவரைப் பற்றி பல நபி மொழிகளும் இருக்கின்றன
ஒன்றே ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்
“இறைவனுக்கு மிகவும் பிடித்தமான து தாவுத் நபியின் தொழுகை , நோன்பு இரண்டும்
ஒவ்வொரு இரவிலும் 1/3 நேரம் தொழுவார்
ஒருநாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற் பார் “
நபி மொழி
ஜபூர் வேதம் பற்றி ஒரு சில குரான் வசனங்கள் இருக்கின்றன
ஆனால் அந்த வேதம் என்ன சொல்கிறது என்ற விளக்கம் ஏதும் இல்லை
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;.
இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
— திருக்குர்ஆன் 4:163[6]
உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்;
இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
— திருக்குர்ஆன் 17:55[7]
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
— திருக்குர்ஆன் 21:105[8]
வாயை மூடி அமைதி காயத்தால் மேன்மை பெறலாம்
என்று இந்த வேதத்தில் வருவதாக எங்கோ படிததாக நினைவு
பைபிளின் ஒரு பகுதியான சங்கீதம் Psalm ஜபூர் வேதம் என்று சொல்லப்படுகிறது
பறவைகள், விலங்குகளுடன் உரையாடும் ஆற்றல் பெற்றவர் காற்றையும் ஜீன்களையும் தன் கட்டுப்பாட்டில் வைதிருந்தவர்
இப்படி பல அரிய ஆற்றல்களை பெற்ற நபி சுலைமான் அவர்களின் தந்தை நபி தா வுத் ஆவார்
இன்றைய வினா
ஜோனா ,
ஜோப்
இவர்கள் யார் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
03 ரமளான் (09) 1446
04032025 செவ்வாய்
சர்புதீன் பீ